Showing posts with label தமிழ். Show all posts
Showing posts with label தமிழ். Show all posts

Sunday, February 21, 2021

அறிவோம் தமிழ் - புதிய சொற்கள்

 இன்று கவிஞர் வாலி “கலைஞரை” பற்றி புனைந்த கவிதைகள் புத்தகம் (136 பக்) படிக்க நேர்ந்தது. அவற்றில் கவிஞர் கையாண்ட சில வார்த்தைகளும் அதன் பொருளும். இவை எமக்குப் புதிது!!! உமக்கு??


            புதிய சொற்கள்                                 பொருள்

  1. மதலை                                                        மகன் (குழந்தை)
  2. குதலை                                                       குழந்தை மொழி (மழலை)
  3. மன்பதை                                                   மனிதகுலம்
  4. ஒக்கல்                                                         இடுப்பு
  5. கஞ்சுகம்                                                    அங்கி/சட்டை
  6. குப்பாயம்                                                 சட்டை / கவசம் போன்ற உடை
  7. சீயம்                                                            வெல்லத்தால் செய்யப்படும் இனிப்பு
  8. தகவு                                                            பெருமை
  9. பரல்                                                             விதை
  10. இமிழ்                                                           தழை
                        

Thursday, July 2, 2020

மாயலோக கன்னி

அடியேய்! 

மனம் கொய்தவளே!

நினைவுகளை

படிமங்களாயும்

பழம் படிமங்களை

மீள் உயிர்களாயும்

மாற்றிடும் 

மாயலோக கன்னியோ - நீ!!!

மயக்கம்

என் இனியவளின்
புன்னகைக்கு
மயங்காத 
நீள் பட்டியலில்
என் வாழ்வு மட்டும்
தப்பிப் பிழைத்திடவா
செய்யும்!!!!

Thursday, January 24, 2013

கலவை - தமிழ் காதல் கவிதைகள்


 கலவை
--------------

பூவில் வாசமும்

நாவில் சுவையும்

வானில் வண்ணமும்

ஊனில் உயிரும்

நீரில் நிறமும்

கண்ணில் காட்சியும்

என்னில் நீயும் !!!

கலந்ததெங்கே?


Wednesday, January 2, 2013

உன்மத்தம் - தமிழ் காதல் கவிதைகள் - Tamil Kaadhal kavithaigal


உன்மத்தம்
--------------------------

கடலலைகள் ஓயலாம்

காற்றும் திசை மாறலாம்

காட்சிகாண் கண்களும் 

கவிதைக் கைகளும்

பாதைசெல் கால்களும்

செயல்தனை மறக்கலாம்!

ஓயா உன் நினைவலையால்

ஓங்கிய உன்மத்த நிலை

என்று மாறுமோ !!!

Thursday, November 1, 2012

படித்ததால் தெரிந்து கொண்டது - பாலிண்ட்ரோம்

தமிழில் காணக் கிடைக்கும் ஒரு பாலிண்ட்ரோம் (இதற்க்கான தமிழாக்கம் என்ன?) திருஞான சம்பந்தரால் எழுதப்பட்டதாக படித்ததில் தெரிந்து கொண்டது.


“யாமாமா நீ யாமாமா யாழீ காமா காணாகா காணா காமா காழீயா மாமாயா நீ மாமாயா !”


பொருள் : சிற்றுயிரான நாங்கள் கடவுள் என்றால், பொருந்துமா? நீ ஒருவனே கடவுள் என்றால், பொருந்தும். ( சுஜாதாவின் கற்றதும் பெற்றதும் - பாகம் IV, பக் - 121)                                                    

Tuesday, September 25, 2012

உளறல்-தமிழ் காதல் கவிதைகள் - Tamil kaadhal kavithaigal

உளறல்
----------

எனது உளறல்கள்

அனைத்தையும்

அரிய கவிதை

என்கிறாய்!!!

கவிதைகளை

என்னவென்பாய்?

ஆக்கிரமிப்பு - தமிழ் காதல் கவிதைகள் - Tamil Kaadhal Kavithaigal

ஆக்கிரமிப்பு
------------------

எண்ணை வளத்திற்க்காய்

நாடுகள் - சரி !!!

என்ன வளத்திற்க்காய்

என்னை நீ?

Friday, August 17, 2012

தமிழ்த்தாய் வாழ்த்து


மௌனம் - தமிழ் காதல் கவிதைகள் - Tamil Kaadhal Kavithaigal

மௌனம்
-------------

என்னுடன் நீயிருக்கும்

தருணங்களில் வேகங்காட்டும்

என் கடிகை!

 நீ செல்லும்

அத்தருணத்திலே 

என் மனம்போல்

மௌனிப்பதேன்!!

Thursday, October 27, 2011

Tamil kavithaigal

சந்தேகம்
========

சிறைவாசமிருந்து மீண்ட

சீதைக்கே சிதைமூட்டினான்

கண்டதும் காதலில் விழுந்த

அவள்தன் காதல் கணவன் !!!


பொம்பியா சீசரின்

நம்பிக்கைக்குரிய

மனைவிதான் இருப்பினும்

கிடைத்த பரிசு

அவளுக்கு என்னவோ?


புகைபோலிருப்பின்

தீ இருந்தே தீருமா?

இலவம் பஞ்சின் மேல்

கண் வைத்து

காத்திருக்கும் கிளி

இதில் இலவத்தின்

பங்குதான் என்னவோ?

Sunday, January 16, 2011

Tamil kavithaigal

யாரடா நீ?
==========

ஒரு மழையும் ஒரு புயலும்
ஒன்று சேர ஏற்படுத்துகிறாய் !
எப்படி முடிகிறது உன்னால் மட்டும் ?
நல்லதும் தீயதும் ஒன்றே என்றும்
பொய்யும் உண்மையும் அழகுதான் என்றும்
நீ மட்டுமே சொல்கிறாய் !
மனிதர்களின் பார்வைகள்
கண்ணாடியின் வழியே தோன்றும்
காட்சி பிழைகளான பின்பங்கள் என
நன்றாக உணர்ந்தவன் நீ
அதனாலேயே அதை கல் எரிந்து
உடைதிடவும் உன்னால் மட்டுமே முடிகிறது !
கடவுள் காதல்,காமம்,பெண் எனும் பட்டியலில்
ஒவ்வொன்றுக்குமான உனது
விளக்கங்கள் பிரமிப்பாய் இருக்கிறது .....
பெண் உணர்வுகளின் கடைசி சொட்டு
ரத்தத்தையும் உறிந்துவிடும் ஆண்களுக்கிடையில்
என்னொரு சிறு உணர்வும் கூட
புண்பட்டு விடாது பார்த்துகொள்கிறாய்...
பயணத்தின் வலி நெடுகிலும்
நான் பார்க்கும் ஆண்கள் எல்லோரிடமும்
மனதுக்குள் ஓர் கேள்வியை கேட்கிறேன்
"நீங்கள் யாரும் ஏன் அவனை போல் இருக்கவில்லை " என்று
நான் கேட்கும் கேள்விகளுக்கு நடுவே
இப்போதும் ஒரு புன்னகை செய்வாய்
ஆயிரம் வார்த்தைகளின் அர்த்தங்களை
ஓர் புன்னகையில் உன்னால் மட்டுமே
உணர்த்திட முடியும் ......
எல்லோரும் உன்னால் என்னென்னவோ ஆகிறார்கள்
ஆனால், நீ , நீயாகவும் ,நீயே இந்த உலகமாகும்
உன்னால் மட்டுமே இருக்க முடியும் .....
எப்போதும் ...






நன்றி : மீனா...

Thursday, April 22, 2010

Tamil kavithaigal

எ(உ)ன் வானின் நிலா !!


என் வானின் நிலா நீ !
நிலா என்றதாலேயா - என்
ஒவ்வொரு இரவும் புதிதாயிருகிறது !

பௌர்ணமியாய்
அம்மாவாசையாய் - இதற்கிடையில்
வளர்வதும் தேய்வதுமாய் !

வானில் நிலா நீயல்ல
பின்பே உணர்ந்தேன்
நானே யதுவென்று !

அதனால் தானோ
வளர்வதும் தேய்வதுமாய்
நானும் என்னிரவுகளும்!

நிலவல்ல நீயெனக்கு
எனை போர்த்தும் வானம் - உன்னிலே
ஒளிர்வதும் மறைவதுமாய் நான் !

உன் பரந்த மனதில்
எனக்குமோர் இடம்கொடுத்தாய்
வானில் நிலவாய் !

Friday, February 12, 2010

Tamil kavithaigal

மெல்ல கொல்லும் விஷம்
=======================

என்னை மெல்ல கொல்லும் விஷம்

நீ ஒரு அமுதவிஷம் தான்


உன்னை விரும்பியே நான்


குடிக்கிறேன் உன் காதலுடன்


கல் நெஞ்சனையும் கரைத்திடும்


காயங்கள் பல கொடுத்திடும்


இருப்பினும் தீபம் நோக்கிய ஈசல்போல்


தெரிந்தே விழுகிறேன் உன் மேல் - காதலே


இதற்க்காய் இறுமாந்திராதே


என்னவள் காதலோ இதற்க்கும் மேலே


உன்னையல்ல காதலே - உன்


காதலையே நாங்கள் காதலிக்கிறோம்!!

Wednesday, January 13, 2010

Tamil kavithaigal

முழுமை
========

உன்னழகிய மதிமுகத்தை


பவுடர் போட்டு மறைக்கிறாய் நீ !


உன்னிரு செவ்விதழ்களை


வர்ணம் பூசி மறைக்கிறாய் நீ !


உன் வேல் விழிகளை


மையிட்டு மறைக்கிறாய் நீ ! - ஆனால்


என்னிடம் உன்னை மட்டும்


முழுமையாய் மறைப்பதில்லையே அதேன்?




Tamil kavithaigal

இடை வெளி
============

நீ தொட்டபோதெல்லாம்


நான் வேண்டாமென்றது


உன்னையல்ல அன்பே !


நம் இருவருக்கிடையே


இருந்த இடைவெளியைத்தான் !!

Tamil kavithaigal

கல்லறைகள்
===========

மண்ணுக்குள் முகம் புதைக்கும்


நெருப்புக் கோழ்யாய் - என்


நெஞ்சுக்குள் முகம் புதைத்த


அக்கணத்தில் உடைந்தன கல்லறைகள்


என் மனக்கல்லறைகள்.