Showing posts with label tamil kavithaigal. Show all posts
Showing posts with label tamil kavithaigal. Show all posts

Thursday, July 2, 2020

மாயலோக கன்னி

அடியேய்! 

மனம் கொய்தவளே!

நினைவுகளை

படிமங்களாயும்

பழம் படிமங்களை

மீள் உயிர்களாயும்

மாற்றிடும் 

மாயலோக கன்னியோ - நீ!!!

கடந்து போ !!!

எப்படித்தான்
அனைத்தையுமே
அனாசியமாக
கடந்து போகிறாய் - நீ
மாறாய்
உன்னை மட்டும்
கடப்பது தான்
அனைத்திற்கும்
கடினம் போலும் !!!!

மயக்கம்

என் இனியவளின்
புன்னகைக்கு
மயங்காத 
நீள் பட்டியலில்
என் வாழ்வு மட்டும்
தப்பிப் பிழைத்திடவா
செய்யும்!!!!

Monday, October 8, 2012

படித்ததில் பிடித்தது - தமிழ் கவிதைகள்

காத்திருந்து காத்திருந்து

சோர்கையில்

நீ வருவாய்

கோபப்படுவேன் நான்

வெட்கப்படத் தெரியாததால்.

படித்ததில் பிடித்தது - தமிழ் கவிதை


இரும்பிலும்

பூக்கள் பூக்கும்

ஜன்னலில்

உன் முகம்.

      ( நன்றி : அந்நியன்)

Tuesday, September 25, 2012

முயற்சி - தமிழ் கவிதைகள் - Tamil kavithaigal

முயற்சி
------------

சிறகொடிந்த பறவையாய்

இருப்பதாய் நினைப்பதைவிட

மேலே மேலே

பறந்து பறந்து

சிறகொடிதல் அனைத்திலும்

மேலானது!!!

அனுமதி- தமிழ் காதல் கவிதைகள் - Tamil Kaadhal Kavithaigal


அனுமதி
------------

உன்னில் நான்

வேறூன்றியுள்ளதாய்

சொன்னாயே நீயன்று !!!

பின் ஏன் என்னை

உன் அநுதின வாழ்வில்

என்னொருயடிகூட

உள் நுழைய அனுமதி

மறுக்கிறாயே நீயோயின்று!!!

Wednesday, August 22, 2012

சுமை- தமிழ் காதல் கவிதைகள் - Tamil Kaadhal Kavithaigal

சுமை
--------

கையில் உன்னை ஏந்தியபோது

திடுக்கிட்டு பயந்து சொன்னாய்

நான் மிகக் கனமென்று

தினம் தினம் சுமக்கிறேனே

உன்னை என் நெஞ்சில்

இதற்காய் என்ன சொல்வாய்?

Friday, August 17, 2012

யுகங்கள் - தமிழ் காதல் கவிதைகள் -- Tamil Kaadhal Kavithaigal

யுகங்கள்
-------------

வானில் வட்ட நிலா

மறுமுறை தோன்ற

ஓர் பகலே!!!

சுட்டெரிக்கும் சூரியனுக்கோ

ஓரிரவே!!

உனைபிரிந்து மறுநாள்

வருவதற்க்குள்

கடினமாய் கடந்திடுதே

பல யுகங்கள் !!!

மௌனம் - தமிழ் காதல் கவிதைகள் - Tamil Kaadhal Kavithaigal

மௌனம்
-------------

என்னுடன் நீயிருக்கும்

தருணங்களில் வேகங்காட்டும்

என் கடிகை!

 நீ செல்லும்

அத்தருணத்திலே 

என் மனம்போல்

மௌனிப்பதேன்!!

Wednesday, August 15, 2012

படித்ததில் பிடித்தது - தமிழ் காதல் கவிதை

இதயமும் இடைவெளி

விட்டுத்தான்

துடிக்கும் அந்த

இடைவெளியும் உன்னைப்

பற்றித்தான்  நினைக்கும்...!!!


( நன்றி : இரத்தன்)

Tuesday, August 7, 2012

Tamil Kavithai

 உறவு

 நண்பர்களாய் சந்தித்து

 காதலர்களாய் பயணித்து

 கணவன் மனைவி போல் 

 வாழ்ந்த வாழ்வு

 “தொடர்பு” என்ற ஒற்றைச் சொல்லில்

  கள்ளமாய் முடிவுற்றது தினசரிகளில்.

Wednesday, January 25, 2012

தமிழ்கவிதை - Tamil kavithai

வரம்

நினைக்கும் போது வந்து


நினையாததைத் தந்து

நித்திலம் போல

நெஞ்சத்தில் நிலைத்து

நின்று நித்தமெனக்கு

நெக்குருகி யாம்

தந்த தரிசனங்கள்

வகை எவ்வகை!!!

Thursday, October 27, 2011

Tamil kavithaigal

சந்தேகம்
========

சிறைவாசமிருந்து மீண்ட

சீதைக்கே சிதைமூட்டினான்

கண்டதும் காதலில் விழுந்த

அவள்தன் காதல் கணவன் !!!


பொம்பியா சீசரின்

நம்பிக்கைக்குரிய

மனைவிதான் இருப்பினும்

கிடைத்த பரிசு

அவளுக்கு என்னவோ?


புகைபோலிருப்பின்

தீ இருந்தே தீருமா?

இலவம் பஞ்சின் மேல்

கண் வைத்து

காத்திருக்கும் கிளி

இதில் இலவத்தின்

பங்குதான் என்னவோ?

Thursday, April 22, 2010

Tamil kavithaigal

எ(உ)ன் வானின் நிலா !!


என் வானின் நிலா நீ !
நிலா என்றதாலேயா - என்
ஒவ்வொரு இரவும் புதிதாயிருகிறது !

பௌர்ணமியாய்
அம்மாவாசையாய் - இதற்கிடையில்
வளர்வதும் தேய்வதுமாய் !

வானில் நிலா நீயல்ல
பின்பே உணர்ந்தேன்
நானே யதுவென்று !

அதனால் தானோ
வளர்வதும் தேய்வதுமாய்
நானும் என்னிரவுகளும்!

நிலவல்ல நீயெனக்கு
எனை போர்த்தும் வானம் - உன்னிலே
ஒளிர்வதும் மறைவதுமாய் நான் !

உன் பரந்த மனதில்
எனக்குமோர் இடம்கொடுத்தாய்
வானில் நிலவாய் !

Friday, February 12, 2010

Tamil kavithaigal

மெல்ல கொல்லும் விஷம்
=======================

என்னை மெல்ல கொல்லும் விஷம்

நீ ஒரு அமுதவிஷம் தான்


உன்னை விரும்பியே நான்


குடிக்கிறேன் உன் காதலுடன்


கல் நெஞ்சனையும் கரைத்திடும்


காயங்கள் பல கொடுத்திடும்


இருப்பினும் தீபம் நோக்கிய ஈசல்போல்


தெரிந்தே விழுகிறேன் உன் மேல் - காதலே


இதற்க்காய் இறுமாந்திராதே


என்னவள் காதலோ இதற்க்கும் மேலே


உன்னையல்ல காதலே - உன்


காதலையே நாங்கள் காதலிக்கிறோம்!!