Showing posts with label பாடல்கள். Show all posts
Showing posts with label பாடல்கள். Show all posts

Wednesday, January 13, 2010

Tamil kavithaigal

முழுமை
========

உன்னழகிய மதிமுகத்தை


பவுடர் போட்டு மறைக்கிறாய் நீ !


உன்னிரு செவ்விதழ்களை


வர்ணம் பூசி மறைக்கிறாய் நீ !


உன் வேல் விழிகளை


மையிட்டு மறைக்கிறாய் நீ ! - ஆனால்


என்னிடம் உன்னை மட்டும்


முழுமையாய் மறைப்பதில்லையே அதேன்?




Tamil kavithaigal

அப்பாவி
========

என்னை உன்னுலகில்


தொலைத்துவிட்டு


என்னுலகில்


தேடுகின்ற நான்


அப்பாவி அல்லவா?

Friday, May 8, 2009

என்ன செய்வீர்கள் மிஸ்டர் இந்தியன்?

என்ன செய்வீர்கள் மிஸ்டர் இந்தியன்?
- செழியன், கவிதைகள்


யணத்தில் உங்கள் இருக்கையில் 
இன்னொருவர் அமர்ந்துகொண்டு 
எழ மறுத்தால் என்ன செய்வீர்கள்?
சாலையில் உங்கள் வாகனத்தை 
இன்னொரு வாகனம் இடித்துவிட்டால் 
என்ன செய்வீர்கள்?
உங்கள் குழந்தையைப் பள்ளி ஆசிரியர்
காயம் வர அடித்துவிட்டால் என்ன செய்வீர்கள்?
பேருந்தில் உங்கள் மகளை இன்னொருவர் உரசுவதைப் பார்த்தால் என்ன செய்வீர்கள்?
உங்கள் வீட்டுக்குள் அத்துமீறி 
சில அந்நியர் புகுந்தால்
என்ன செய்வீர்கள் மிஸ்டர் இந்தியன்? 
இறையாண்மை பேசுவீர்களோ?
இதற்கெல்லாம்...
எதிர்த்தலே தீவிரவாதம் எனில்
இலங்கையில் நடப்பதும் அஃதே நண்ப!
ஆர்ப்பாட்டம் நடத்தியாச்சு
ஒப்பாரி வெச்சாச்சு
கண்டனக் கூட்டம் முடிஞ்சுது
கவிதை வாசிச்சாச்சு
கட்டுரைகள் எழுதியாச்சு
ஓவியம் வரைஞ்சாச்சு
ஊர்வலம் போயாச்சு
மனிதச் சங்கிலி
அடையாள உண்ணாவிரதம்
வழக்கறிஞர் போராட்டம்
மாணவர் போராட்டம்
திரையுலகப் போராட்டம்
கடையடைப்பு.
தந்தி அடித்து
மெயில் அனுப்பி
எஸ்.எம்.எஸ். விட்டு
வேலைநிறுத்தம் செஞ்சு
பேருந்துகள் கொளுத்தி
தூதரகங்களை நொறுக்கி
ஜெயிலுக்குப் போயி
சாகும் வரை உண்ணாவிரதமும் இருந்து
அட! பதினேழு பேர் தீக்குளிச்சுச் செத்தும்போயாச்சு.
.....க்காளி... என்னதான்யா செய்யறது இனி!


Wednesday, March 11, 2009

கலைஞர் - ஒரு தமிழினக் கொலைஞர்!

கன்னித்தமிழ்ப் பெண்ணை கயவர்கள் கற்பழிக்க
கைகட்டி வாய்ப்பொத்தி கைக்கூலியாய் நின்று,
கண்ணகிக்கு சிலையெடுத்து கவிபாடும் கறுப்பாடு!

தம்பிதம்பியென்று தமிழனை நம்பவைத்து தக்க
சமயத்தில் தலையறுக்கும் கருங்காலி!

சொல்லிச்சொல்லி உனை வரலாறு ஏசும்!
உன் பெயர் சொன்னாலே தமிழுக்கு கூசும்.

சொத்துக்குவிப்பதையே தொழிலாக செய்து செய்து
செத்துப்போன உன் செவிகளுக்கு கேட்கலையோ
கத்திக் கதறிய என் முத்துக்குமரன் ஒலி!

பௌத்த நெறிபடித்துசிங்கள வெறிபிடித்துதமிழன் உயிர்குடித்து,
தோள்கள் திணவெடுத்துபெண்கள் முலையறுத்துதமிழன் இனமழிக்க
துடிக்கின்றான் சிங்களவன் அங்கே!

தெய்வக்குறள் படித்துபதவி வெறிபிடித்துசூது மிக வளர்த்து,
ஊதி உடல் பெருத்துபாதித் தமிழகத்தைபரம்பரைக்கு எழுதிவிட
தவிக்கின்றான் எங்களவன் இங்கே!

இத்தாலி எருமைக்கு தப்பாது தாளமிடும்
சப்பாணிக் கழுதையே - இனி
எப்போதும் மறவாது தமிழினம் - உனை
எப்போதும் மறவாது தமிழினம்!

தமிழினம் அழிகிறதுதமிழகம் அழுகிறது!
தலைவன் நீ என்ன செய்தாய்!

தனி அறையில் ஓய்வெடுத்துதிறம்பட நீ நடித்து,
முதுமையிலும் இளமைகண்டாய்! - எங்கள்
முதுகெலும்பை ஏன் உடைத்தாய்!

பொட்டென்று விழுந்தவன் பொசுக்கென்று போய்விடுவான்
சட்டென்று தமிழகம் விழித்தெழும் என்றிருக்க!
எட்டிப்பிடித்த சனி விட்டுத்தொலையாதெனும்
வெட்டிப் பழமொழிக்கு சான்றாக வந்துவிட்டாய்

குலத்தைக் கெடுக்க வந்த கோடாரிக் காம்பே! - உன்
சிரத்தை அரிந்துவரச் சொன்னான் ஒரு வடவன்
சினந்து எழுந்தோம் தமிழ்த்தலைவன் நீ என்று - இன்று
உணர்ந்து கொண்டோம் அது மிகப்பெரிய தவறென்று!

தமிழைக்கொண்டே தமிழனை அழித்து விட்டாய்! - இனி உன்
மந்திரத் தமிழ் நடை மயக்காது எங்களை
உன் உதட்டோர புன்னகையை உண்மையென நம்பினோம்
ஒட்டுமொத்த தமிழரின் புதைக்குழி என்றறியாமல்!

இசைபாடும் புலவன் இன்று வசை பாட வந்ததேன்
அசையாத கல் மனது அசைந்திடும் என்பதாலாஇல்லை
கடுப்பேறி குமைந்திருக்கும் என் போன்ற இதயங்கள்
இளைப்பாற ஒரு வாய்ப்பை ஏற்படுத்தித் தந்திடவே!

தமிழனை குறைவாக எடைபோட்டாய்!
தமிழனுக்கு எதிராக தடை போட்டாய்!
முடிந்தது உன் ஆட்சி!
மடிந்தது உன் சூழ்ச்சி!

அரசியல் பிழைத்தோர்க்கு அறமே கூற்றெனும் நீதியும் நிலைக்கட்டும்!
அடிவயிறு எரிகின்ற அன்னையரின் வெப்பம் உனை
அப்படியே பொசுக்கட்டும்!
ஆதித்தமிழினம் அகிலத்தை ஆளும்!
அடிமை விலங்குகள் துகள்களாய் உடையும்!
அன்னியன் ஆதிக்கம் அடியோடு ஒழியும்!
அன்பெனும் ஒரு குடையுள் அகிலமே திரளும்!

சுதந்திரக்காற்று பரவட்டும் எங்கனும்
சுதந்திரக்காற்று பரவட்டும் எங்கனும் - இது
சத்தியம்சத்தியம்சத்தியம்!

திவாகரன்,தம்பிரான் தோழர்

Thanks To Thivakaran....

Wednesday, September 10, 2008

இன்றைய குறள் - தெரிந்து தெளிதல்

தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்
தீரா இடும்பை தரும் அதிகாரம் : தெரிந்து தெளிதல்

பொருள் : ஒருவரை ஆராயாமல் நம்புதலும், ஆராய்ந்து நம்பிக்கை வைத்தவனை சந்தேகப்படுதலும் ஒருவருக்கு நீங்காத துன்பத்தை கொடுக்கும்.

விளக்கம் : நாம் முன்னைய பதிவிலே இக்குறள் போன்றதொரு "நாலடியார்" பாடல் ஒன்றை பார்த்து இருந்தோம். நாலடியார் பாடலுக்கும் இக்குறளுக்கும் இடையில் பல வேறுபாடுகள் உள்ளதை வாசகர்கள் மிகவும் இலகுவாக கண்டு பிடித்து இருப்பீர்கள்.
நாலடியார் "நாம் நம்பி பழகிய ஒருவரை குற்றமுள்ளவராக பின்னர் அறிய நேர்ந்தாலும், அவர் குற்றம் பொறுத்து கொள்தல் நலம்" என நமக்கு அறிவுறுத்துகிறதேயொழிய இதனால் கேடு நேரும் என்று சொல்லவே இல்லை.
ஆனால் திருக்குறள் "ஒருவரை நம்புவது ஒரு சாதரண விஷயம் இல்லை என்பதில் மிகத் தெளிவாக இருக்கிறது" யாரையும் நம்புவதற்கும் முன்னர் "ஆராய்ந்து" நம்புதல் வேண்டும். "ஆராய்ந்து" என்பதிலும் திருக்குறள் நாலடியார் போலல்லாமல் நம்மை மிகவும் "தேர்ந்து தெளிதல் வேண்டும்" என்கிறது. அவ்வாறு "தேர்ந்து தெளிந்து" கண்டுகொண்ட ஒருவரை நாமே "சந்தேகித்தல்" என்பது யாருடைய குற்றம்?. அவ்வாறு நாம் சந்தேகித்தால் நமக்கு "கேடு" விழையும் என்பதில் ஏதேனும் சந்தேகம் உண்டோ? . திருக்குறள் இதில் நாலடியாரை விட மிக ஆழமான பார்வையைத் தருகிறது இல்லையா?.

உங்களின் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.

Thursday, August 28, 2008

தினம் ஒரு குறள்

சமீபத்தில், எனக்கு ஒரு திருக்குறள் புத்தகத்தை பரிசாக கொடுத்தார் ஒருவர். தினம் ஒரு குறள் படித்து, அதனை இங்கு பதிவும் செய்யலாம் என்ற எண்ணம் உண்டு.
உங்களின் விருப்பம்?

Wednesday, July 30, 2008

படித்ததால் பிடித்தது - நாலடியார் பாடல்

சமீபத்தில் ஆறாம் வகுப்பு தமிழ் புத்தகம் ஒன்றை புரட்ட நேர்ந்தது, எவ்வாறு தற்போதைய பாட புத்தகங்கள் உள்ளன என்ற ஆவல் முன்னேயுந்த புரட்டியதால் ஏற்பட்ட விளைவே இந்த பதிவு.
பாடல் (ஞாபகத்தில் உள்ள வரிகளே இங்கு , தவறுகள் இருக்க வாய்ப்புகள் உண்டு )
நல்லார் எனத்தான் நனிசெய்து கொண்டாரை
அல்லார் எனினும் அடக்கிக்கொளால் வேண்டும்
நெல்லுக் குமியுண்டு நீருக்கு நுரையுண்டு
புல்லிதழ் பூவிற்குமுண்டு
( யாரேனும் இப்பாடலுக்கு அர்த்தம் சொல்ல முயன்றால் நலமாய் இருக்குமே? இல்லையேல் நானே இந்த பதிவில் பின்னர் பதிவு செய்கிறேன்.)
பொருள் :
நல்லவர் என நாம் ஒருவரை நினைத்து அவருடன் நன்கு பழகி வரும்போது ஒரு சில நேரங்களில் அவர்களிடம் உள்ள சில கெட்ட பழக்கங்களைப் பார்க்க நேரிடலாம். அவ்வாறு நாம் காணக்கூடிய தருணங்களில் அவர்களை பற்றி நமது கருத்துக்களை மாற்ற வேண்டிய தருணம் வந்துவிட்டதாக நினைத்து அவர்களை கெட்டவர்கள் எனப்புரிந்து கொள்ளலாம். ஆனால், நாம் அவ்வாறு நினைப்பதற்கு முன்பு பின்வருவனவற்றை நமது மனதில் இருத்தி நினைத்தோமேயானால் அவர்களை தவறாக நினைப்பதற்கு பதிலாக உலக நியதியை புரிந்து கொள்ள இயலும்.
நெல்லுக்கு இருக்கும் உமி போன்றும் ,நீருக்கு இருக்கும் நுரை போன்றும், பூவில் இருக்கும் வாசமில்லா இதழ் போன்றும், மனிதர்களிடமும் ஒரு சில குறை கண்டால் அதனை நாம் பொருத்துக்கொள்ளலே நலம்.