Tuesday, March 5, 2013

பாடல் - உனக்கென நான்


உனக்கென நான் - காதலில் விழுந்தேன்





                                             உனக்கென நான் - காதல்


Tuesday, February 26, 2013

பாடல் - விழியில் விழுந்து


சிரி சிரி - சுட்டி குட்டீஸ்

பல நாள் கழித்து விழுந்து விழுந்து சிரித்து கண்ணில் இருந்து கண்ணீரே வந்து விட்டது........


Thursday, February 14, 2013

காதலர் தினம் - என் காதலே என் காதலே!!


படித்ததில் பிடித்தது - காதலர் உள்ளம்

சுனையிற் சிறுநீரை எய்தாதென் றெண்ணிப்
பிணைமான் இனி துண்ண வேண்டிக்--கலைமாத்தன்
கள்ளத்தின் ஊச்சும் சுரம்என்ப, காதலர்
உள்ளம் படர்ந்த நெறி.
--ஐந்திணை ஐம்பது - மாறன் பொறையனார்.

Friday, February 8, 2013

கேட்டதில் பிடித்தது - சஜ்தா (ஹிந்தி )



 படம் : மை நேம் இஸ் கான்
இசை : சங்கர் ஈசான் லாய்
பாடகர்கள் : ரஹத் ஃபதே அலி கான் , ரிச்சா சர்மா மற்றும் சங்கர் மகாதேவன்
எழுதியவர் : நிரஞ்சன் ஐயங்கார்.


பாடலின் தமிழ் மொழியாக்கம் கிடைத்தால் கொடுத்து உதவவும். நன்றி!!

Tuesday, February 5, 2013

கேட்டதில் பிடித்தது - இசையும் பாடல்வரிகளும்



கும்கி திரைப் படப்பாடல் ...இசையும், பாடல் வரிகளும் திரும்பத் திரும்ப கேட்டு மகிழுங்கள். :)

இன்னும் இனிமை காதல் செய்தால்....ஆதலால் காதல் செய்வீர்!!!

படித்ததில் பிடித்தது - உருது கஸல் பாடல் (தமிழில்)

’யா ரப் (இறைவனே)!

 நீ என்னை

நான் செய்த பாவங்களுக்காக

தண்டிக்க நினைத்தால்,

அந்தக் கணக்கில்,

நான் செய்ய நினைத்து செய்யாமல் விட்ட

எத்தனையோ பாவங்களைக்

கழித்துக்கொண்டு விடு’.

                   - மீர்ஸா காலிப்

-- குஷ்வந்த் சிங் இந்த கஸலை தனது புத்தகமொன்றில் மேற்கோள் காட்டியிருப்பதாக எழுத்தாளர் சாரு நிவேதிதா தனது “சினிமா சினிமா” புத்தகத்தில் (பக். 38, உயிர்மை வெளியீடு) குறிப்பிட்டுள்ளார்.

மனம் புதையா நினைவுகள் - தமிழ் காதல் கவிதைகள்

மனம் புதையா நினைவுகள்
---------------------------------------

பேசிய

பேச்சுக்களும்

உணர்ச்சியோடும்

உணர்வோடும்

உறவாடி

உரையாடிய

உரையாடல்களும்

கலந்திருக்கலாம் - இல்லை

கரைந்திருக்கலாம்

காற்றினிலே!!!



உடலொடு

உடல் மேவ

உரசியதும்

முகத்தோடு

முகம் தேய்த்து

முகர்ந்ததும்

தொட்டதும்

அணைத்ததும்

அனைத்தும்

உணர்வற்று

அணைந்திருக்கலாம்

உடலினிலே!!!


நெஞ்சோடு

நெஞ்சம்

கிளர்க்க

நினைவுகளில்

திளைத்தோம்

திகட்டா

இன்பமதில்

நெஞ்சினில்

நிதம் மோதும்

நினைவுகளை

புதைப்பதெங்கே - நீ

நிரம்பிய என்

மனதினிலா?

Thursday, January 31, 2013

மனது - தமிழ் காதல் கவிதைகள்

மனது
----------

வோடோபோன் நாய் போல்

உன் பின்னே செல்லும் மனதை

அடித்து அடக்கி

இழுத்து வந்து கட்டினாலும்

அடங்க மறுத்து

அத்துமீறுதே!!

என் செய்வேன்?

என் மனதை!!


உலகின் வரைமுறையும்

உள்ளத்தின் வரையறையும்

வகைதொகையின்றி அறிந்திருந்தும்

உடைத்தெறிந்து

உதறித் தள்ளி

ஓயாது ஓலமிடுதே!!

என் செய்வேன்?

என் மனதை!!

Tuesday, January 29, 2013

படித்ததில் பிடித்தது - சித்தர் பாடல்

சித்தர் பாடல்
------------------

ஒருமடமாதும் ஒருவனும் ஆகி
இன்ப சுகம் தரும் அன்பு பொருத்தி
உணர்வு கலங்கி ஒழுகிய விந்து
ஊறு சுரோணித மீது கலந்து

பனியில் ஓர்பாதி சிறுதுளி மாது
பண்டியில் வந்து புகுந்து திரண்டு
பதுமம் அரும்பு கமடம் இதென்று
பார்வை மெய்வாய்செவி கால்கைகள் என்ற

உருவமும் ஆகி உயிர் வளர் மாதம்
ஒன்ப்தும் ஒன்ற்ம் நிறைந்து மடந்தை
உதரம் அகன்று புவியில் விழுந்து
யோகமும் வாரமும் நாளும் அறிந்து

மகளிர்கள் சேனை தராணை ஆடை
மண்பட உந்தி உடைந்து கவிழ்ந்து
மடமயில் கொங்கை அமுதம் அருந்தி
ஓர் அறிவு ஈர் அறிவாகி வளர்ந்து

ஒளிந்கை ஊறல் இதழ்மடவாரும்
உகவந்து முகந்திட வந்து தவழ்ந்து
மடியில் இருந்து மழழை மொழிந்து
வா இரு போ என நாமம் விளம்ப

கேட்டதில் பிடித்தது -திலிப் வர்மன் பாடல்கள்


       கனவெல்லாம் நீதானே!!!


                                                 
      உயிரைத் தொலைத்தேன்

Thursday, January 24, 2013

கலவை - தமிழ் காதல் கவிதைகள்


 கலவை
--------------

பூவில் வாசமும்

நாவில் சுவையும்

வானில் வண்ணமும்

ஊனில் உயிரும்

நீரில் நிறமும்

கண்ணில் காட்சியும்

என்னில் நீயும் !!!

கலந்ததெங்கே?


Tuesday, January 15, 2013

ஓட்டுப் போடும் ஜனநாயகம் !!!


Who is Mighter?. - MUST Watch -


                                             Who is mightier?

காதல் - தமிழ் காதல் கவிதைகள் - Tamil kaadhal kavithaigal

காதல்
=======

கனிவுடனே

காதல் காமம்

கற்பித்தாய் !

களித்தோம் - பின்

கழித்தாய் !

காதலில் நித்தம்

நினைத்தாலே போதுமென

நில் சற்றே

விலகியென்றாய் - நான்

விளங்கிடவே

நிதர்சன வாழ்க்கை

நிதம் சொன்னாய் !

சித்தம் கலங்கா

தத்தம் கடமை

நித்தம் புரிவோமென்றாய் !

காலை மாலை

காணும் உன்

கவின்முகம் காணா

கதறும் மனதை

கல்லாக்கிக் கொள்ளலும்

காதலோ?.

Thursday, January 10, 2013

பிரியா - தமிழ் காதல் கவிதைகள் - Tamil kaadhal kavithaigal

பிரியா
------------------

காற்றில் சுகந்தம்

நீரில் உப்பு

நாவில்  இனிப்பு

வானில் நீலம்

ஊனில் உயிர்

நினைவில் நீ !!!


Tuesday, January 8, 2013

காதல் - தமிழ் காதல் கவிதைகள் - Tamil kaadhal kavithaigal

காதல்
======

மனதிற்க்கும்

மூளைக்குமான

தொடர் போராட்டத்தில்

எவ்வகையிலும்

வெல்வது இறுதியில்

என்றும் மனமே!!

Friday, January 4, 2013

திண்டாட்டம் - தமிழ் கவிதைகள் - Tamil kavithaigal

திண்டாட்டம்
------------------

இறந்த தலைவனுக்கோ

பிறந்த நாள் கொண்டாட்டம் !!

இங்கே இருப்பவனுக்கோ

வாழ்வே திண்டாட்டம் !!!

பாட்டுக்குப் பாரதி !!!

ச்சம் தவிர். 
ண்மை தவறேல். 
ளைத்தல் இகழ்ச்சி. 
கை திறன். 
டலினை உறுதிசெய். 

ண்மிக விரும்பு.
ண்ணுவ துயர்வு. 
றுபோல் நட. 
ம்பொறி ஆட்சிகொள். 
ற்றுமை வலிமையாம். 

ய்த லொழி. 
டதங் குறை. 
ற்ற தொழுகு. 
காலம் அழியேல். 
கிளைபல தாங்கேல். 

கீழோர்க்கு அஞ்சேல். 
குன்றென நிமிர்ந்துநில். 
கூடித் தொழில் செய். 
கெடுப்பது சோர்வு. 
கேட்டிலும் துணிந்துநில். 

கைத்தொழில் போற்று. 
கொடுமையை எதிர்த்து நில். 
கோல்கைக் கொண்டு வாழ். 
கவ்(கௌ)வியதை விடேல். 
ரித்திரத் தேர்ச்சிகொள். 

சாவதற்கு அஞ்சேல். 
சிதையா நெஞ்சு கொள். 
சீறுவோர்ச் சீறு. 
சுமையினுக்கு இளைத்திடேல். 
சூரரைப் போற்று. 

செய்வது துணிந்து செய். 
சேர்க்கை அழியேல். 
சைகையிற் பொருளுணர். 
சொல்வது தெளிந்து சொல். 
சோதிடந் தனையிகழ். 

சௌரியந் தவறேல். 
மலிபோல் வாழேல். 
ஞாயிறு போற்று. 
ஞிமிரென இன்புறு. 
ஞெகிழ்வத தருளின். 

ஞேயங் காத்தல் செய். 
ன்மை இழவேல். 
தாழ்ந்து நடவேல். 
திருவினை வென்றுவாழ். 
தீயோர்க்கு அஞ்சேல். 

துன்பம் மறந்திடு. 
தூற்றுதல் ஒழி. 
தெய்வம் நீ என்றுணர். 
தேசத்தைக் காத்தல்செய். 
தையலை உயர்வு செய். 

தொன்மைக்கு அஞ்சேல். 
தோல்வியிற் கலங்கேல். 
வத்தினை நிதம் புரி. 
ன்று கருது. 
நாளெலாம் வினைசெய். 

நினைப்பது முடியும்.
நீதிநூல் பயில்
நுனியளவு செல்.
நூலினைப் பகுத்துணர்
நெற்றி சுருக்கிடேல். 

நேர்படப் பேசு.
நையப் புடை.
நொந்தது சாகும்.
நோற்பது கைவிடேல்.
ணத்தினைப் பெருக்கு. 

பாட்டினில் அன்புசெய்.
பிணத்தினைப் போற்றேல்.
பீழைக்கு இடங்கொடேல்.
புதியன விரும்பு.
பூமி யிழந்திடேல். 

பெரிதினும் பெரிதுகேள்.
பேய்களுக்கு அஞ்சேல்.
பொய்ம்மை இகழ்.
போர்த்தொழில் பழகு.
ந்திரம் வலிமை. 

மானம் போற்று.
மிடிமையில் அழிந்திடேல்.
மீளுமாறு உணர்ந்துகொள்.
முனையிலே முகத்து நில்.
மூப்பினுக்கு இடங்கொடேல்.

மெல்லத் தெரிந்து சொல்.
மேழி போற்று.
மொய்ம்புறத் தவஞ் செய்.
மோனம் போற்று.
மௌட்டியந் தனைக் கொல். 

வனர்போல் முயற்சிகொள்.
யாவரையும் மதித்து வாழ்.
யௌவனம் காத்தல் செய்.
ஸத்திலே தேர்ச்சிகொள்.
ராஜஸம் பயில். 

ரீதி தவறேல்.
ருசிபல வென்றுணர்.
ரூபம் செம்மை செய்.
ரேகையில் கனி கொள்.
ரோதனம் தவிர். 

ரௌத்திரம் பழகு.
வம் பல வெள்ளமாம்.
லாகவம் பயிற்சிசெய்.
லீலை இவ் வுலகு.
(உ)லுத்தரை இகழ். 

(உ)லோகநூல் கற்றுணர்.
லௌகிகம் ஆற்று.
ருவதை மகிழ்ந்துண்.
வானநூற் பயிற்சிகொள்.
விதையினைத் தெரிந்திடு. 

வீரியம் பெருக்கு.
வெடிப்புறப் பேசு.
வேதம் புதுமைசெய்.
வையத் தலைமைகொள்
வௌவுதல் நீக்கு.

--சுப்பையா (எ) சுப்பிரமணியன் (எ) பாரதி - பிறப்பு - திசம்பர் 11, 1882

Thursday, January 3, 2013

படித்ததில் பிடித்தது - தமிழ் கவிதைகள்

சூடு சொரணை கொஞ்சமும் இல்லை
சொல்லடா நீயா தமிழனின் பிள்ளை?

தோட்டத்தில் தன்னை அழித்தவன் வீட்டுக்கே
தோரணம் ஆனது வாழை! - நீயும்
நாட்டினில் உன்னை அழித்தவன் காலையே
நக்கினாய் நீ ஒரு கோழை!

கூப்பிட்டுப் பதவி கொடுத்த பகைவனை
கும்பிட்டு வாய்பொத்தி நின்றாய்! - அவன்
சாப்பிட்டு மிஞ்சி எறிந்ததை அன்றோ நீ
சாக்கடை நாய்போலத் தின்றாய்!

தீயவர் தலையை திருக மறந்தாய் உன்
தேசத்தைப் பாரடா! நெருப்பு! - அட
ஆயிரம் பெருமை படைத்த உன் அன்னை மண்
அழியநீ அல்லவா பொறுப்பு?

என்றென்றும் உன்தாய் நிலத்தில் தமிழ்வானில்
இன்னொருவன் கொடி பறக்கும்! - அட
நன்றடா நன்று! இருந்துபார் உன் மண்ணில்
நாளை அவன் பிள்ளை பிறக்கும்!

                                                               நன்றி : கவிஞர் காசி.ஆனந்தன்

Wednesday, January 2, 2013

படித்ததில் பிடித்தது - தமிழ் காதல் கவிதைகள்

காதல் என்ற வார்த்தையில்
காமத்தை ஒளித்து
காவிய காதல் என்று
கற்புரம் அடித்து
இன்றோ நாளையோ

நாளை மறுதினமோ
மணப்போம் என்று சொல்லி
பேசிய போதெல்லாம்
உன் விழி பாவைகள்
கடந்து சென்ற பாதையை
பார்த்தேனும்
பாவிச் சிறுக்கி இவளுக்கு
பாடம் புரிந்திருக்க வேணும்
புதிராய் நின்றுவிட்ட
வாழ்க்கை அரிச்சுவடிகளை
தேடிப்பார்த்தாலும் கிடைக்கவில்லை
காதலின் அர்த்தம் மட்டும்
உன் அகராதியிலாவது கண்டு சொல்
காதலின் அர்த்தம் காமம் மட்டுமேவா 
என்று...


                                                            ( நன்றி : விண்முகில்)

பாடம் - தமிழ் காதல் கவிதைகள் - Tamil Kaadhal Kavithaigal

பாடம்
---------

காதல் காமம்

பாடம் புகட்ட

கவிஞனானேன்!!

வாழ்க்கை நிதர்சண

நிலை நிறுத்த

நிர்மூலமாக்கி என்னை

பாடம் ஆக்கினாய்!!

இவ்வஞ்ஞானியை

ஞானியாக்கவா ?

மெய்ஞானியாக்கவா??


உன்மத்தம் - தமிழ் காதல் கவிதைகள் - Tamil Kaadhal kavithaigal


உன்மத்தம்
--------------------------

கடலலைகள் ஓயலாம்

காற்றும் திசை மாறலாம்

காட்சிகாண் கண்களும் 

கவிதைக் கைகளும்

பாதைசெல் கால்களும்

செயல்தனை மறக்கலாம்!

ஓயா உன் நினைவலையால்

ஓங்கிய உன்மத்த நிலை

என்று மாறுமோ !!!