Showing posts with label kaadhal. Show all posts
Showing posts with label kaadhal. Show all posts

Tuesday, September 25, 2012

அனுமதி- தமிழ் காதல் கவிதைகள் - Tamil Kaadhal Kavithaigal


அனுமதி
------------

உன்னில் நான்

வேறூன்றியுள்ளதாய்

சொன்னாயே நீயன்று !!!

பின் ஏன் என்னை

உன் அநுதின வாழ்வில்

என்னொருயடிகூட

உள் நுழைய அனுமதி

மறுக்கிறாயே நீயோயின்று!!!

Wednesday, August 22, 2012

சுமை- தமிழ் காதல் கவிதைகள் - Tamil Kaadhal Kavithaigal

சுமை
--------

கையில் உன்னை ஏந்தியபோது

திடுக்கிட்டு பயந்து சொன்னாய்

நான் மிகக் கனமென்று

தினம் தினம் சுமக்கிறேனே

உன்னை என் நெஞ்சில்

இதற்காய் என்ன சொல்வாய்?

Friday, August 17, 2012

யுகங்கள் - தமிழ் காதல் கவிதைகள் -- Tamil Kaadhal Kavithaigal

யுகங்கள்
-------------

வானில் வட்ட நிலா

மறுமுறை தோன்ற

ஓர் பகலே!!!

சுட்டெரிக்கும் சூரியனுக்கோ

ஓரிரவே!!

உனைபிரிந்து மறுநாள்

வருவதற்க்குள்

கடினமாய் கடந்திடுதே

பல யுகங்கள் !!!

மௌனம் - தமிழ் காதல் கவிதைகள் - Tamil Kaadhal Kavithaigal

மௌனம்
-------------

என்னுடன் நீயிருக்கும்

தருணங்களில் வேகங்காட்டும்

என் கடிகை!

 நீ செல்லும்

அத்தருணத்திலே 

என் மனம்போல்

மௌனிப்பதேன்!!

Tuesday, August 7, 2012

Tamil Kavithai

 உறவு

 நண்பர்களாய் சந்தித்து

 காதலர்களாய் பயணித்து

 கணவன் மனைவி போல் 

 வாழ்ந்த வாழ்வு

 “தொடர்பு” என்ற ஒற்றைச் சொல்லில்

  கள்ளமாய் முடிவுற்றது தினசரிகளில்.

Wednesday, January 25, 2012

தமிழ்கவிதை - Tamil kavithai

வரம்

நினைக்கும் போது வந்து


நினையாததைத் தந்து

நித்திலம் போல

நெஞ்சத்தில் நிலைத்து

நின்று நித்தமெனக்கு

நெக்குருகி யாம்

தந்த தரிசனங்கள்

வகை எவ்வகை!!!