Wednesday, May 19, 2010
Thursday, May 13, 2010
தலையங்கம்: நம்பிக்கைத் துரோகிகள்...(தினமணி தலையங்கம் உணர்திடும் உண்மை என்ன? )
Monday, October 26, 2009
விழ விழ எழுவோம் !
Saturday, May 9, 2009
Shocking Claims in Srilanka's concentration camps in Vavuniya
Open Letter from a Rwandan Tutsi to the Tamil Brothers of Sri Lankan descent in Canada
Open Letter from a Rwandan Tutsi to the Tamil Brothers of Sri Lankan descent in Canada
May 6, 2009, 05:53
By Eloge Butera
I am a Tutsi from Rwanda, my family and I moved to Canada in the early 90s. This country is my home now. The fact that my daughters have a safe and secure life here is something that I thank the Lord for everyday. Things are very normal back home. Putting the bitter past behind them, the Tutsis and the Hutus are living together as one people now. To me, no matter how well Rwanda changes, my country will always be Canada.........
This article is removed after receiving OBJECTION...as found below,
Eloge Butera did not write this article. I ask the person responsible for posting the article to remove it immediately because it does not represent my views, and because it constitutes a farce impersonation of my identity. I therefore condemn and denounce this misrepresentation and once again request its immediate removal from the cite
NOTE: Article is removed, because the identity of the person written this article couldn't be properly validated.
Friday, May 8, 2009
என்ன செய்வீர்கள் மிஸ்டர் இந்தியன்?
| - செழியன், கவிதைகள் |
இன்னொருவர் அமர்ந்துகொண்டு
எழ மறுத்தால் என்ன செய்வீர்கள்?
சாலையில் உங்கள் வாகனத்தை
இன்னொரு வாகனம் இடித்துவிட்டால்
என்ன செய்வீர்கள்?
உங்கள் குழந்தையைப் பள்ளி ஆசிரியர்
காயம் வர அடித்துவிட்டால் என்ன செய்வீர்கள்?
பேருந்தில் உங்கள் மகளை இன்னொருவர் உரசுவதைப் பார்த்தால் என்ன செய்வீர்கள்?
உங்கள் வீட்டுக்குள் அத்துமீறி
சில அந்நியர் புகுந்தால்
என்ன செய்வீர்கள் மிஸ்டர் இந்தியன்?
இறையாண்மை பேசுவீர்களோ?
இதற்கெல்லாம்...
எதிர்த்தலே தீவிரவாதம் எனில்
இலங்கையில் நடப்பதும் அஃதே நண்ப!
ஆர்ப்பாட்டம் நடத்தியாச்சு
ஒப்பாரி வெச்சாச்சு
கண்டனக் கூட்டம் முடிஞ்சுது
கவிதை வாசிச்சாச்சு
கட்டுரைகள் எழுதியாச்சு
ஓவியம் வரைஞ்சாச்சு
ஊர்வலம் போயாச்சு
மனிதச் சங்கிலி
அடையாள உண்ணாவிரதம்
வழக்கறிஞர் போராட்டம்
மாணவர் போராட்டம்
திரையுலகப் போராட்டம்
கடையடைப்பு.
தந்தி அடித்து
மெயில் அனுப்பி
எஸ்.எம்.எஸ். விட்டு
வேலைநிறுத்தம் செஞ்சு
பேருந்துகள் கொளுத்தி
தூதரகங்களை நொறுக்கி
ஜெயிலுக்குப் போயி
சாகும் வரை உண்ணாவிரதமும் இருந்து
அட! பதினேழு பேர் தீக்குளிச்சுச் செத்தும்போயாச்சு.
.....க்காளி... என்னதான்யா செய்யறது இனி!
Friday, March 13, 2009
வணங்கா மண் - உறவுகளின் உயிர் காப்பதற்க்கான தாயகம் நோக்கிய பயணம்

உலகமே கை விட்ட பின் எம் உறவுகளின் உயிர் காப்பதற்க்கான தாயகம் நோக்கிய பயணம்.
பிரித்தானிய வாழ் புலம் பெயர்ந்த உறவுகளால் ஈழத்து உறவுகளுக்கான உணவு மற்றும் உயிர்க்காப்பு மருந்துக்களுடன் தாயகம் நோக்கிய பயணத்திற்கு அனைவரும் ஒன்றிணையுமாறு "வணங்கா மண்" ஒருங்கிணைப்பு குழு கேட்டுக்கொள்கிறது.
தற்போதைய யுத்த நடவடிக்கையில் என்றுமில்லாதவாறு உணவு ஆயுதமாக பாவிக்கப்படுகின்றது.
இதற்க்கு ஜநா முதல் உலகநாடுகள் அனைத்துமே எம்மக்களை தீண்டத்தகாதவர்களாக பார்க்கிறது, இந்நிலையில் எம் உறவுகளுக்காக பிரித்தானிய தமிழர்களால்"வணங்கா மண்" நடவடிக்கை இன்று முதல் பிரித்தானியாவில் பல்வேறு இடங்களில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
ஒருபுறம் குண்டுமழையில் சாவுக்குள் வாழ்வாய் வாழும் மக்களை பட்டியால் சாவு கொள்ள விடுவோமா? வேதனைகள் சோதனைகளை கடந்து வந்து புலம் பெயர்ந்து வாழும் நாம் எம்மினம் அழிய விடுவோமா? அரசுகள் கைவிட்டால் என்ன? மனிதநேயம் கொண்ட மக்களிடம் எடுத்து செல்லுங்கள் எம்துயரை, பெற்றுக்கொள்வோம் அவர்கள் ஆதரவை. காத்திடுவோம் எம் உறவுகளை என்று வேண்டிநிற்கிறது "வணங்கா மண்" ஒருங்கிணைப்பு குழு.
தொடர்புகளுக்கு info@vannimission.org
Thanks : Tamilskynews.com
Wednesday, March 11, 2009
Do you know how people in vanni make their living....
Tuesday, February 24, 2009
Once an Insurgent now a president......Eelam struggle
Monday, February 23, 2009
UGLY face of WAR
February 22, 2009
A recent surge by the Sri Lankan army, boosted by an aggressive expansion of its forces, has prompted the government to predict that victory is just around the corner in its 25-year war with the Tamil Tiger rebels who have sought to carve out a homeland in the north and east of this island nation.
Sri Lanka has paid a huge price, in economic loss, social and political strain, destroyed infrastructure and human lives, for its long civil war. Almost everyone in this nation of 20 million has been touched.
But it's the rice- and coconut-growing areas such as Kuliyapitiya district with its 150,000 population that have paid the highest toll. The government's all-volunteer army has found fertile ground for recruiting in rural areas where job prospects are limited and the army offers adventure, a uniform and a decent paycheck of about $200 a month. "Join the winning side," says a nationwide radio advertisement.
Bulathsinhala estimates that 99% of the recruits sign up for economic reasons, with many schoolchildren now wanting to be soldiers rather than doctors or lawyers.
"War is always cruel, but the media has promoted good war news, so more people are encouraged to join," he said.
As families in the community confront the human toll, the war machine continues to draw in new recruits. At the Kuliyapitiya Urban Council complex in town, a bus ringed with loudspeakers and posters of fighting men lures new enthusiasts.
"When you come to the interview, bring your stuff and be ready to go," advises a nearby poster showing a soldier in a Rambo-style pose.
A few miles away, Kusuma Gunawardana sits on a hard bed trying to make sense of it all, a cat curled at her side, tears running down her worn face. Her son, a soldier in the Sri Lankan army, has been missing since mid-January. Nationwide, the missing number in the thousands, the result of desertions, front lines that have shifted repeatedly and dense jungle that can decompose a body in rapid order.
Nor is she sure she can believe what the government news channels say. Her older son, also in the army, told her the situation is often significantly different from the rosy images beamed on the channels. She just wants her family back. "I can't think about what happened to my son," she said. "I believe he's still alive."
Down the road, Jayantha Perera, 33, has doubts about a quick end to the war, but for different reasons. It's been going on so long that to him the wrapping-up seems too fantastic. As he talks in a living room decorated with a military calendar and the family's foot-powered sewing machine, he remembers the pride he felt when his older brother Samantha left for the war.
Samantha hasn't been heard from in more than a decade and is presumed dead, one of the 4,000 soldiers and 12,000 Sri Lankan civilians and fighters with the Liberation Tigers of Tamil Eelam missing in the war, according to estimates by the Assn. of War Affected Women, a civic group based in the city of Kandy.
As he talks, Perera's aging father suddenly erupts into a wail of grief. It happens two or three times a day, Perera says; he's been on a downward slide since his son's disappearance. The family no longer keeps pictures of Samantha around, except for one fading shot of his regiment, to avoid upsetting his father even more.
Farther down the back roads of the community, posters glorify those who died as placards urge citizens to donate blood, using pictures of neighbors who have already signed up and shipped out as an incentive. "Brother you have not died, you bloom as a flower among us," reads a poster marking the death of a commando who died recently at Elephant Pass.
A few feet from the commando with a chestful of ribbons, Koolitha Manchanayaka, 19, waits by the recruiting bus talking to friends after signing up. The teenager is accompanied by his father and a cousin and is ready to fulfill a dream he's had since he was 17.
His parents were reluctant to let him go, he said, but he eventually persuaded them after promising to be careful. For added security, he wears a pirith cord, a string worn around the wrist, blessed by monks at a nearby Buddhist temple.
Sure, there is a risk that he will be captured or killed, he said. "It could happen to anyone, but I'm not scared," he said, his eyes alight with excitement. "This is the right time to go. If I'm not involved at this decisive time, there's no point."
The military added 40,000 recruits in each of the last two years, said Brig. Udaya Nanayakkara, a military spokesman, to reach the current 180,000 level for the armed forces.
Those with missing family members receive a death settlement after one year of about $750 for single soldiers and $1,500 for married, along with other pension and insurance payouts.
Laborer K.G. Salen Fernando, 63, of Galkapuyaya village, said his family didn't receive anything from the government when his son disappeared 17 years ago.
A decade or so back, the family finally conceded that their boy wasn't coming back, he said. But without ever seeing his body, the realization was very difficult to accept. "He died for the sake of the country, so I'm proud," the father said, through a toothless jaw. "But they didn't even give us 5 cents. We'd be happy if they paid us something."
Visaka Dharmadasa, the founder of the Assn. of War Affected Women, said the disappearance of one of her sons eight years ago was the catalyst for starting the group, which aims to make the government and the International Committee of the Red Cross more accountable on MIA issues.
The association now numbers 2,000 members. Even though it's been nearly a decade since she last saw her missing son, she said she still waits expectantly. "There's always hope," she said. "It's not going to help anyone when you deny the existence of a person."
Gunawardana's agony is still fresh, as she reflects on Tamil mothers on the other side who must be experiencing some of the same pain.
"In the north, they're going through the same suffering we have," she said. "We are running out of boys in this country. We don't need a war with the north to lose more children."
Courtesy : LosAngels times Reach Author : mark.magnier@latimes.com
Monday, February 16, 2009
The cost of war and the price of Victory
Find the link below, it is an interview with managala samaweera, a dissent raising voice against pakses.
The cost of war and the price of Victory
My comments in telegraph :
Thanks peter for coming up with this article...
I recently called my aunt in Mannar, she says they are unaware of whats happening in SL..coz of entire MEDIA black-out.
One must understand the actual intend of SL Govt..
Systematically, they trying to destabilize instutitions either by issuing direct threats or intimidating them.
If a govt could issue threat to Foreigners, diplomats and INGOs, even denying UN to setup its office, threatening ICRC of dire consequences if its presence in vanni is found....what do you call this?
International community still wants evidence to raise its voice...For UN, the news is very minimal to act upon it...UN Secretary General endorses the Action of SL president based on the assurances he is giving.
What happened to all the INTERNATIONAL PACTS?. who first torn into pieces?. Why International community keeps its mouth shut when all that happened?
When there is clear evidence of Mass killings and systemic and systematic Genocide..there is nobody to raise their concern...
I know, the Entire world would come once everything been done and no one living in vanni.
If we go by SL Govts statements made about number of LTTE present in vanni...one would surely raise a question...how LTTE being in hundreds could manage this huge number of stranded people in vanni?. Even if they are armed, whats the possibility of holding them back? getting them moved along with them while they retreated from kili to mullai to puthukudiyiruppu...
Oh !! Is there no genuine intellectual who could raise it to the world to hear?.
We all know LTTE is outnumbered by SLA..and why should they bomb every inch of vanni?. Can't this "so called" world's best army as boasted by SL Govt, could blow them away with their mighty army in a jiffy?. Why should they resort to bombing of civilians?.
What more clear evident needed to take action against Srilankan top executives, when Defence Secretary openly justifies "bombing of hospital as legitimate target"...what more evidence the WORLD wants to take action...
Its really frustrating to LIVE begging these eunuchs (UN,INDIA,co-chairs) to take action...
Friday, February 13, 2009
What you want us to Call THIS? - photos attached
இனப்பகை உருவாகும்?
சிங்கள அரசு தமிழீழத்தில் நடத்திவரும் இனப் படுகொலையைத் தடுத்து நிறுத்தக்கோரி, தமிழகத் தின் பல்வேறு பிரிவு மக்களும் பல வகையான போராட் டங்களின் மூலம் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.
அ.தி.மு.க., காங்கிரஸ் தவிர்த்துத் தமிழகத்தின் அனைத்துக் கட்சித் தலைவர்களும் ஒன்றுபட்டுப் போர்நிறுத்தம் கோரியதோடு மட்டுமின்றி, தமிழக சட்ட மன்றமே இது தொடர்பாக இரு முறை ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பியதுடன், தற்போது 'ஐயகோ' தீர்மானத்தையும் அனுப்பியிருக்கிறது!
இவ்வளவுக்குப் பின்னும், போர்நிறுத்தப் போக்கில் டெல்லி அரசு எந்த நடவடிக்கையும் மேற் கொள்ளவில்லை; சிங்கள அரசுக்கு அளித்துவந்த ராணுவ உதவிகளையும் படைப் பயிற்சிகளையும் நிறுத்த வில்லை.
இதற்குக் காரணம், டெல்லி அரசின் அயலுறவுக் கொள்கையும் அது சார்ந்த இலங்கையுடனான இந்திய அரசின் அணுகுமுறையும்தான். இந்த அணுகுமுறையை மாற்றியமைக்கக் கூடிய வகையில் தமிழக அரசியல் கட்சிகள் ஒற்றுமையின்றித் தங்களுக்குள்ளே போட்டி போட்டுக்கொண்டு டெல்லி அரசுக்குக் காவடி தூக்குவது என்பது பலரும் அறிந்த செய்தி.
இதனால்தான் போரை நிறுத்த முன்வராத டெல்லி அரசு, வாரக்கட்டளை போல் தமிழக மீனவர்கள் சிங்களக் கடற்படையால் சுட்டுக் கொல்லப்படும்போது, அவர்களைக் காப்பாற்ற முயற்சிக்கவில்லை!
மொத்தத்தில், தன் சொந்த நாட்டில் உள்ள ஆறரை கோடித் தமிழர்களைப் பற்றிக் கவலைப்படாமல்... அவர் களுடைய உணர்வுகளை மதிக்காமல்... தன் ஆதிக்க நலனுக்காக அண்டை நாட்டில் உள்ள ஒன்றரை கோடி சிங்களவருக்கு அடியாள் சேவகம் செய்வதையே தன் கொள்கையாகக்கொண்டு இயங்கி வருகிறது டெல்லி அரசு.
இப்படிப்பட்ட சூழலில் தமிழக மக்களின் மனநிலை, அவர்களின் கொதிநிலை எப்படிப்பட்டதாக இருக்கும்... இருக்கிறது?
ஊர் உலகமெல்லாம் இதுபோன்று உரிமைகளுக்காகப் போராடிய மக்களுக்கு நாம் எவ்வளவோ உதவினோம். ஆனால், நம் கண்ணெதிரில் கூப்பிடு தூரத்தில் வதை படும் தொப்புள்கொடி உறவுகளுக்கு எந்த வகையிலும் உதவி செய்ய முடியாமல் கைகளும் கட்டப்பட்டு, வாய்ப்பூட்டும் போடப்பட்டவர்களாக இருக்கிறோமே என்கிற ஆதங்கம், வேதனை தமிழக மக்களிடையே நிலவுகிறது.
போராடும் மக்களுக்கு, டெல்லி அரசு தானாகவும் எதுவும் செய்யாமல்... தங்களையும் எதுவும் செய்ய விடாமல்... சிங்கள அரசின் கொலை பாதகச் செய லுக்குத் துணை போகிறதே என்கிற மனக்குமுறலும், இம்மனக்குமுறலில் தமிழகம் இறையாண்மை மிக்க ஒரு தேசமாக, தனக்கென்று சுதந்திரமான அரசமைப்புச் சட்டமும் படையும்கொண்ட ஒரு நாடாக இருந்திருந்தால், இந்நேரம் ஈழ மக்களுக்கு நம் விருப்பம் போல் உதவலாமே... தமிழக மீனவர்களையும் காப்பாற்றலாமே என்கிற ஆதங்கமும் ஏற்பட்டுள்ளது.
எனவே, டெல்லி அரசு இதை கவனத்தில்கொண்டு சும்மா மேம்போக்காக இதை 'தேசத்துரோகம்', 'பிரிவினை வாதம்' என்று குற்றம்சாட்ட முயலாமல்... இதற்கான வித்து எது, எங்கிருந்து இவ்வுணர்வுகள் உதிக்கின்றன என்பதைக் கண்டறிந்து, அதைக் களைய முற்படவேண்டும் என்பதே நம் வேண்டுகோள்.
இலங்கை இனவெறி அரசை முழு மூச்சோடு ஆதரிக் கும் இந்தியா, இலங்கையில் ஈழத்தின் வரலாற்றைச் சற்றுப் பின்னோக்கிப் பார்த்து, சில செய்திகளைப் புரிந்துகொள்ள வேண்டும். 1948-ல் அதிகாரம் கைக்கு வரப்பெற்ற சிங்களர்கள் படிப்படியான நடவடிக்கைகள் மூலம் தமிழின ஒடுக்குமுறையை மேற்கொண்டு, 1970-ல் தரப்படுத்தல் திட்டம் கொண்டுவந்து தமிழக இளைஞர்களின் கல்வி, வேலைவாய்ப்பைப் பறித்தபோது தொடங்கப்பட்டதுதான் 'தமிழ் மாணவர் பேரவை.'
அவ்வமைப்பு அமைதி வழியில் நடத்திய பல போராட் டங்களை சிங்கள அரசு ஆயுதப்படை கொண்டு குரூரமாக ஒடுக்கியதன் விளைவாக, அம்மாணவர்களிலிருந்து பதிலுக்கு ஆயுதம் ஏந்திப் போராடுவதைத் தவிர தங்களுக்கு வேறு வழியில்லை என்கிற முடிவில் தோற்றம் பெற்றவைதான் போராளி அமைப்புகள்.
இன்று அப்போராளிகள் அமைப்பை ஒடுக்க இலங்கை அரசுக்கு டெல்லி அரசு உதவலாம். தற்காலிகமாக அதில் வெற்றியும் பெறலாம். ஆனால் போராளிகளை, போராட்ட உணர்வை முற்றிலுமாக ஒழித்துவிட முடியாது என்பது தெளிவு. காரணம், போராட்டங்களுக்கான புறக்காரணங்கள் நிலவும் வரை... அது ஏதாவதொரு வடிவில் மீண்டும் மீண்டும் புத்துயிர் பெற்று எழும், தொடரும் என்பதே அறிவியல்.
எனவே, தமிழீழ விடுதலைப் போராட் டத்தை முற்றாக அழித்தொழித்துவிட முடியாது. இந்திய அரசு இன்று இலங்கை அரசுக்குச் செய்துவரும் உதவிகளுக்காக, இலங்கை அரசு என்றென் றைக்கும் டெல்லிக்கு விசுவாசமாகவே இருந்து விடாது. மாறாக, அது எப்போது வேண்டுமானாலும் பாகிஸ் தானோடோ, சீனாவோடோ கைகோத்து இந்தியாவை எதிர்க்கும் என்பதையும் டெல்லி ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ளவேண்டும்.
டெல்லி அரசின் மெத்தனப் போக்கால், 'தமிழகமும் தமிழக மக்களும் இந்தியாவின் ஓர் அங்கமா இல்லையா? நம் உணர்வுகளை மதிக்காமல் டெல்லி ஏன் இப்படி இனப் பகையோடு நடந்துகொள்கிறது? ஒருவேளை தமிழகமோ, தமிழர்களோ இந்தியாவில் வேண்டாம் என்று டெல்லி அரசு கருதுகிறதா?' என்பது போன்ற சந்தேகங்களும் இப்போது தமிழ் மக்களிடையே எழுந்திருப்பதை ஆட்சியாளர்கள் உணரவேண்டும்.
'பிற மாநில மக்களுக்கெல்லாம் ஏதாவது பாதிப்பு என்றால் உடனுக்குடன் தலையிடும் டெல்லி, தமிழர் பிரச்னை என்றால் மட்டும் - அது நதிநீர்ப் பிரச்னையோ வேறு எதுவோ - மெத்தனமாக இருக்கிறதே... அல்லது எதிராகவே செயல்படுகிறதே' என்கிற எண்ணம் தமிழக மக்கள் மத்தியில் ஆழமாக வேரூன்றியுள்ளது.
இந்த உணர்வை அலட்சியப்படுத்தினால், காலப்போக்கில் இது, டெல்லி அரசின்பால் என்றென் றைக்கும் மாறாத, காயம் ஆறினா லும் வடு மறையாத தீராத இனப்பகையை உருவாக்கிவிடும். இது தமிழர் களை டெல்லிக்கு எதிராகக் கோபாவேசத்தோடு களமிறங்கிப் போராடவைக்கும்.
இப்படிப்பட்ட போராட்டங்களை வன்முறை கொண்டு ஒடுக்கிவிடலாம் என்று அரசு நினைத்தால், அந்த எண்ணம் ஈடேறாது. ஈழத்தில் அமைதி வழியில் போராடிய மக்கள், சிங்கள ஆட்சியாளர்கள் அவிழ்த்து விட்ட அடக்குமுறைக்கு எதிராக ஆயுதம் ஏந்தும் நிலைக்குத் தள்ளப்பட்டதைப் போல் தமிழர்களும் தள்ளப்படமாட்டார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.
எனவே, சாரமாக டெல்லிக்கு நாம் உணர்த்த விரும்புவது இதுதான்.
1. டெல்லி ஆட்சியாளர்கள் சிங்கள அரசுக்குத் தொடர்ந்து உதவி, தமிழக மக்களைப் புறக்கணித் தால்... நாளை தமிழக மக்கள் டெல்லியைப் புறக்கணிப் பார்கள்.
2. டெல்லி அரசு தமிழீழத்தில் சிங்கள அரசுக்கு ஆதரவளித்துப் போராளிகளை ஒடுக்க முயன்றால், நாளை தமிழகத்திலும் அது போன்ற போராளிகள் உருவாகித் தங்களுக்குள் ஒன்றிணைய முயல்வார்கள்.
3. டெல்லி அரசு இன்று இலங்கை இறையாண் மையைப் பற்றிக் கவலைப்பட்டால், நாளை இந்திய இறையாண்மை கேள்விக்குள்ளாக்கப்படும் நிலை உருவாகும்.
இது ஏதோ மிரட்டலோ அச்சுறுத்தலோ மேடைப் பேச்சுகளில் கைதட்டல்களுக்காக முழங்கப்படும் வீர வசனங்களோ அல்ல. இது ஓர் அறிவியல் கோட்பாடு. உண்மை. அந்த வகையில் இது, இந்திய ஆட்சியாளர்களுக்கான அறிவுறுத்தல்.
இந்த உண்மையை ஆட்சியாளர்கள் உணரவேண்டும். ஏற்கெனவே வடக்கே காஷ்மீர், வடகிழக்கே நாகாலாந்து, மணிப்பூர், அஸ்ஸாம், மிசோராம், திரிபுரா முதலானவை டெல்லிக்குத் தலைவலியாக இருந்துவருகின்றன. அந்த வரிசையில் தமிழகமும் ஒரு தலைவலியாக மாறவேண்டுமா என்பதை, ஆட்சியாளர்கள் சிந்திக்கவேண்டும். இலங்கையில் ஈழம் போல், இந்தியாவிலும் ஒரு தமிழகம் உருவாவதைத் தடுக்க டெல்லி உடனடியாகப் போர்நிறுத்த நடவடிக்கையை மேற்கொள்ளவேண்டும்!
நன்றி : ஜூனியர் விகடன் - 15.02.2009
Thursday, February 12, 2009
தமிழினத் துரோகம் - கண்டு கொள்ளுங்கள் துரோகிகளை மக்களே !!!
[ வியாழக்கிழமை, 12 பெப்ரவரி 2009, 10:11.22 AM GMT +05:30 ]
தமிழக மக்களிடத்தில் ஈழ ஆதரவு மேலோங்கி வரும் இந்நிலையில் அதை கெடுக்கும் வகையில் தமிழின விரோத மற்றும் துரோக சக்திகள் தமிழீழ விடுதலைப்போராட்டத்தினை கொச்சைப்படுத்தியும் தமிழக மக்களின் ஆதரவை திசை திருப்பியும் தமிழ்மக்களது எழுச்சியை கெடுக்கும் வேலையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
அக்டோபர் முதல் வாரத்தில் அதாவது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முன் முயற்சியால் அக்.2 ஆம் தேதி அனைத்துக் கட்சியினர் நடத்திய உண்ணாவிரதத்துக்குப் பிறகு மயிலை மாங்கொல்லையில் முதல்வர் கலைஞர் கருணாநிதி தி.மு.க. கூட்டத்தைக் கூட்டி, மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்தார். என்ன கூறினார்? ஈழத்தில் போர் நிறுத்தம் செய்ய மத்திய அரசு வலியுறுத்த வேண்டும். இரண்டு வார கெடுவுக்குள் போர் நிறுத்தம் வரா விட்டால், நாடாளுமன்ற உறுப் பினர்கள் பதவி விலகுவார்கள் என்றார். தொடர்ந்து, தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும், தங்கள் பதவி விலகல் கடிதத்தை முன் கூட்டியே கலைஞரிடம் தரத் தொடங்கினர்.
மனிதச் சங்கிலி போராட்டம் நடத்தி, இதே கோரிக்கை வலியுறுத்தப் பட்டது. அதற்கும் மத்திய அரசு அசையவில்லை. அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டினார். மீண்டும் போர் நிறுத்தம் வலியுறுத்தப்பட்டது. வெளிநாட்டுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி இலங்கைக்கு சென்று போர் நிறுத்தத்தை வலியுறுத்த வற் புறுத்தப்பட்டது. முதல்வரை சந்திக்க சென்னை வந்த பிரணாப் முகர்ஜி யிடமும் நேரில் வலியுறுத்தப்பட்டது. பிரணாப் முகர்ஜி இலங்கை போக வில்லை. நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகலுக்கான கெடு முடிந்ததும், அத்திட்டம் கைவிடப்பட்டது. அனைத்துக் கட்சியினரை அழைத்துக் கொண்டு முதல்வர் டெல்லி போய் பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்து நேரில் வற்புறுத்தினார். எந்தத் துரும்பும் அசையவில்லை. ராணுவத்தின் இனப் படுகொலை தொடர்ந்து கொண்டே இருந்தது; மேலும் மேலும் தீவிர மானது.
கிளிநொச்சியை ராணுவம் பிடித்தது. 3 லட்சம் மக்கள் விடுதலைப்புலி களோடு முல்லைத் தீவுக்கு இடம் பெயர்ந்தனர். முல்லைத் தீவையும் ராணுவம் சுற்றி வளைத்து குண்டுகளை வீசி வருகிறது. ஷெல் தாக்குதலை நடத்தி வருகிறது. உணவு, மருந்து பொருள்கள் இல்லை. 'போரில்லாத பகுதியாக' ராணுவம் அறிவித்தப் பகுதியிலும் குண்டு வீச்சு, ஷெல் வீச்சு தொடருகிறது. புதுக் குடியிருப்பில் உள்ள தற்காலிக மருத்துவமனை மீதே குண்டுகளை வீசி நோயாளிகளை பிணமாக்கியது சிங்கள ராணுவம். எங்கும் தமிழனின் மரண ஓலங்கள்; ரத்தவாடைகள்; பிணக் குவியல்கள்.
அய்.நா.வே போரை நிறுத்தக் கோரி தனது தூதுவரை போர் முனைக்கு நேரே அனுப்புகிறது. அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டனும், பிரிட்டன் வெளியுறவுத் துறை அமைச்சர் டேவிட் மிலிபேண்ட் என்பவரும் கூட்டாக இணைந்து போரை நிறுத்தக் கோரி அறிக்கை விடுத்தனர். ஜப்பான், நார்வே, ஜெர்மன் நாடுகளும் போரை நிறுத்துமாறு வேண்டுகோள் விடுத்தன. உலக நாடு களின் கோரிக்கையை ஏற்க முடியாது என்று, ராஜபக்சேயின் தம்பியும், ராணுவ செயலாளருமான கோத்தபய ராஜபக்சே அறிவித்து விட்டார். தமிழ் மக்களின் ராணுவமான விடுதலைப் புலிகள், தற்காப்பு யுத்தம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். உதவிக்குச் சென்ற சர்வதேச செஞ்சிலுவை சங்கத் தின் வாகனங்கள் மீதும், மருத்துவ மனைகள் மீதும் ராணுவம் குண்டு வீச்சு நடத்துகிறது. அய்.நா.வின் பிரதிநிதி களே போர்முனைப் பகுதிகளில் குண்டு வீச்சு காயங்களுக்கு உள்ளாகி விட்டனர்.
சர்வதேசமுமே கண்டிக்கும் இந்த இனப் படுகொலையைக் கண்டித்து, போரை நிறுத்தச் சொல்லாத நாடு இந்தியா தான். அதுவும் தமிழகத்தின் ஒருமித்த வேண்டுகோள், போராட்டங் களை அலட்சியப்படுத்தி, ஆணவச் சிரிப்பு சிரித்து வருகிறது. இவ்வளவுக் கும் பிறகும் இந்தியாவைக் கண்டித்தால் - ஒவ்வொரு நாளும் நடக்கும் இனப் படுகொலையைத் தடுத்து நிறுத்தக் கோரினால் - சிங்கள இனப்படு கொலைக்கு எதிரான குமுறலை தி.மு.க. ஆட்சிக்கு எதிரான 'அரசியல்' என்கிறது - தி.மு.க. தலைமை!
"மத்திய அரசை எதிர்க்கவே கூடாது; தொடர்ந்து வலியுறுத்த வேண்டும்" என்று மீண்டும் தோல்வி கண்ட "வலியுறுத்தல்" பாதையிலேயே பயணம் செய்ய கலைஞர் கருணாநிதி அழைக்கிறார். தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி நீடிக்க வேண்டும் என்ற அற்ப அரசியல் லாபத்துக்காக அன்றாடம் நடக்கும் "இனப் படுகொலை"யை எதிர்த்துப் போராடக் கூடாது என்கிறார்கள்.
மத்திய அரசு - இனப்படு கொலையை தடுக்க வேண்டும் என்று மனம் திருந்தும் காலம் வரை காத் திருக்க வேண்டும் என்கிறார்கள். தி.மு.க. உருவாக்கியுள்ள 'இலங்கைத் தமிழர் நல உரிமைப் பேரவை' நடத்தியுள்ள கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகன் இவ்வாறு பேசியுள்ளார்:
"நம்முடைய குரலை, நம்முடைய வார்த்தையை அவர்கள் மதிப்பார்களா என்பதையெல்லாம் எண்ணிப் பார்த்தால் நம்முடைய நன்மைக்காகத் தான் தமிழ் நாட்டில் கலைஞருடைய ஆட்சி எப்படி இருக்க வேண்டும் என்று கருதுகிறோமோ, அப்படித்தான் டெல்லி யிலே சோனியாகாந்தி வழிகாட்டு தலிலேயே மன்மோகன்சிங் அரசு நீடிக்க வேண்டுமென்று விரும்புகிறோம்" என்று பேசியுள்ளார் ('முரசொலி' பிப்.10)
'தமிழர் நல உரிமைப் பேரவை' என்ற பெயரில் நடைபெறும் கூட்டங் களில் 'தி.மு.க. கூட்டணி நலன்கள்தான்' முன்னிறுத்தப்படுகிறதே தவிர, ஈழத் தமிழர் இனப் படுகொலை பற்றியோ இந்தியாவின் துரோகம் பற்றியோ சிங்கள அரசை கண்டித்தோ, கருத்துகள் முன் வைக்கப்படுவதில்லை. இதை பேராசிரியர் அன்பழகனே, தனது உரையில் ஒப்புக் கொண்டு இருக்கிறார்.
"இங்கே பேசிய நண்பர்கள்.... வருங்காலத்திலேகூட தமிழகத்திலே கலைஞருடைய கையைத்தான் வலி யுறுத்த வேண்டும். தேர்தலிலே ஏமாந்து விடக் கூடாது என்பதை யெல்லாம் எடுத்துச் சொன் னார்கள். அது ஓரளவுக்கு அரசியல் தான். அந்த அரசியலை கழகம் சார்பாக இன்றைக்கு நான் பேசத் தயாராக இல்லை" ('முரசொலி' பிப்.10)
- என்று பேசியிருப்பதன் மூலம், "இலங்கைத் தமிழர் நல உரிமைப் பேரவையின் பரப்புரை எப்படி நடக்கிறது என்பதை அவரே வெளிப் படுத்தியுள்ளார். அப்படிப் பேசிய பேராசிரியர் அன்பழகனோ முடிவில் எதைப்பேச மாட்டேன் என்றாரோ, அதே அரசியலைத்தான் அவரும் வலியுறுத்தியும் உள்ளார்.
ஒவ்வொரு நாளும் தமிழர்கள் மீதான இனப் படுகொலைகளைப் பற்றியோ
போரை நிறுத்த வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தியோ
வீதியெங்கும் விமான குண்டு வீச்சுக்கு ஷெல் தாக்குதலுக்கும் பலியாகி பிணமாகக் கிடக்கும் தமிழினத்தைப் பற்றியோ
மருத்துவமனைகள் மீதே குண்டுகள் வீசப்படுவது பற்றியோ
- இவர்கள் மக்களிடம் பேசுவதற்கு தயாராக இல்லை. காங்கிரசுக்காரர் களோடு கைகோர்த்துக் கொண்டு, 'மத்திய அரசுக்கு ஆக்கமும் ஊக்கமும் தரவேண்டும்" வரப்போகும் தேர்தலில் தி.மு.க. - காங்கிரஸ் ஆட்சிகளுக்கு வாக்களிக்க வேண்டும் என்று பேசி வருகிறார்கள். விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் மீது சேறு வாரி இறைக்கப்படுகிறது. ஆனால் ராணுவக் கொடுமைகள் அடக்கி வாசிக்கப்படு கிறது. இதற்குப் பெயர் இலங்கைத் தமிழர் நல உரிமைக் கூட்டமைப்பாம்!
தமிழின உணர்வாளர்களே! இந்த வரலாற்றுத் துரோகத்தை அடையாளம் காணத் தவறாதீர்கள்!
courtesy : tamilwin.com
Short History Of Srilankan struggle
How much hardship they had to undergo before relying on "Freedom fight"....











