Thursday, April 22, 2010

Tamil kavithaigal

எ(உ)ன் வானின் நிலா !!


என் வானின் நிலா நீ !
நிலா என்றதாலேயா - என்
ஒவ்வொரு இரவும் புதிதாயிருகிறது !

பௌர்ணமியாய்
அம்மாவாசையாய் - இதற்கிடையில்
வளர்வதும் தேய்வதுமாய் !

வானில் நிலா நீயல்ல
பின்பே உணர்ந்தேன்
நானே யதுவென்று !

அதனால் தானோ
வளர்வதும் தேய்வதுமாய்
நானும் என்னிரவுகளும்!

நிலவல்ல நீயெனக்கு
எனை போர்த்தும் வானம் - உன்னிலே
ஒளிர்வதும் மறைவதுமாய் நான் !

உன் பரந்த மனதில்
எனக்குமோர் இடம்கொடுத்தாய்
வானில் நிலவாய் !