Showing posts with label இலக்கியம். Show all posts
Showing posts with label இலக்கியம். Show all posts

Thursday, April 22, 2010

Tamil kavithaigal

எ(உ)ன் வானின் நிலா !!


என் வானின் நிலா நீ !
நிலா என்றதாலேயா - என்
ஒவ்வொரு இரவும் புதிதாயிருகிறது !

பௌர்ணமியாய்
அம்மாவாசையாய் - இதற்கிடையில்
வளர்வதும் தேய்வதுமாய் !

வானில் நிலா நீயல்ல
பின்பே உணர்ந்தேன்
நானே யதுவென்று !

அதனால் தானோ
வளர்வதும் தேய்வதுமாய்
நானும் என்னிரவுகளும்!

நிலவல்ல நீயெனக்கு
எனை போர்த்தும் வானம் - உன்னிலே
ஒளிர்வதும் மறைவதுமாய் நான் !

உன் பரந்த மனதில்
எனக்குமோர் இடம்கொடுத்தாய்
வானில் நிலவாய் !

Wednesday, January 13, 2010

Tamil kavithaigal

அப்பாவி
========

என்னை உன்னுலகில்


தொலைத்துவிட்டு


என்னுலகில்


தேடுகின்ற நான்


அப்பாவி அல்லவா?

Tamil kavithaigal

இடை வெளி
============

நீ தொட்டபோதெல்லாம்


நான் வேண்டாமென்றது


உன்னையல்ல அன்பே !


நம் இருவருக்கிடையே


இருந்த இடைவெளியைத்தான் !!

Tamil kavithaigal

கல்லறைகள்
===========

மண்ணுக்குள் முகம் புதைக்கும்


நெருப்புக் கோழ்யாய் - என்


நெஞ்சுக்குள் முகம் புதைத்த


அக்கணத்தில் உடைந்தன கல்லறைகள்


என் மனக்கல்லறைகள்.

Thursday, August 20, 2009

Tamil kavithaigal

அது காதலாகுமா?
================

நான் உன்னை விட்டு விலகும் போதெல்லாம்
முன்னிலும் நெருங்கியதாகவே உணர்கிறேன்


உனக்குக் கொடுத்த வாக்கை காப்பாற்றுவேன்
என்று முன்னிலும் உறுதியாகவே
இறுதியாகவே கூறினாலும்
ஒவ்வொரு முறையும் தோற்றுப் போகும் நான்
வெட்கமென்பதே அறியாதவனாயிருக்கிறேன்


என்னையும் அறியாமல் நான்
இவ்வாறு இருப்பதற்க்கு காரணம்
என்னை ஆட்டிப் படைக்கும் சக்தியே
அது தான் காதல் என்றால்
அது இல்லாமல் போக
நான் தான் இல்லாமல் போக வேண்டுமா?


அன்புக்குரியவளை
ஆட்டிப் படைத்து
உடலையும் உள்ளத்தையும்
உருக்குலைக்கும் அது தான்
என் காதல் என்றால்
அது காதலாகுமா?

Monday, November 3, 2008

Enchantment - Poem

Following is my first ever attempt in English....
there may be lot of grammatical mistakes and hopefully it has come up well...
as usual your comments are welcome with open heart...


Enchantment

Oh! Sweety, Oh! My Sweety!
You may now know
Why I dare to call you so!
After having tasted your nectar
How do you want me to call you so!

All tastes that I have vanished
My memory fails with other
What magic did you do with me
Nectar flowing from heavenly fountain
Did trigger all that so!

Losing myself unto you
Never did I dream of
Oneday It's gonna be True
Do touch with your magic wand
Making my life ever transform.

SILENCE - Poem

I hereby planning to present some of the poems written my friend in coming posts as well.
I enjoy birds chirping in the silence of dawn
I listen to the conscience in the silence of my mind
I watch snow flakes in the silence of night
I hear your voice in the silence of my heart!
Justice suffers in the silence of truth
Death occurs in the silence of life
Peace surrounds you in the silence of thoughts
Love blossoms in the silence of hearts!
Wounded heart is longing for silence
Tired of waiting for the loved one in vain
Show the path where there is no pain
All I ask for the eternal silence!

Wednesday, September 10, 2008

இன்றைய குறள் - தெரிந்து தெளிதல்

தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்
தீரா இடும்பை தரும் அதிகாரம் : தெரிந்து தெளிதல்

பொருள் : ஒருவரை ஆராயாமல் நம்புதலும், ஆராய்ந்து நம்பிக்கை வைத்தவனை சந்தேகப்படுதலும் ஒருவருக்கு நீங்காத துன்பத்தை கொடுக்கும்.

விளக்கம் : நாம் முன்னைய பதிவிலே இக்குறள் போன்றதொரு "நாலடியார்" பாடல் ஒன்றை பார்த்து இருந்தோம். நாலடியார் பாடலுக்கும் இக்குறளுக்கும் இடையில் பல வேறுபாடுகள் உள்ளதை வாசகர்கள் மிகவும் இலகுவாக கண்டு பிடித்து இருப்பீர்கள்.
நாலடியார் "நாம் நம்பி பழகிய ஒருவரை குற்றமுள்ளவராக பின்னர் அறிய நேர்ந்தாலும், அவர் குற்றம் பொறுத்து கொள்தல் நலம்" என நமக்கு அறிவுறுத்துகிறதேயொழிய இதனால் கேடு நேரும் என்று சொல்லவே இல்லை.
ஆனால் திருக்குறள் "ஒருவரை நம்புவது ஒரு சாதரண விஷயம் இல்லை என்பதில் மிகத் தெளிவாக இருக்கிறது" யாரையும் நம்புவதற்கும் முன்னர் "ஆராய்ந்து" நம்புதல் வேண்டும். "ஆராய்ந்து" என்பதிலும் திருக்குறள் நாலடியார் போலல்லாமல் நம்மை மிகவும் "தேர்ந்து தெளிதல் வேண்டும்" என்கிறது. அவ்வாறு "தேர்ந்து தெளிந்து" கண்டுகொண்ட ஒருவரை நாமே "சந்தேகித்தல்" என்பது யாருடைய குற்றம்?. அவ்வாறு நாம் சந்தேகித்தால் நமக்கு "கேடு" விழையும் என்பதில் ஏதேனும் சந்தேகம் உண்டோ? . திருக்குறள் இதில் நாலடியாரை விட மிக ஆழமான பார்வையைத் தருகிறது இல்லையா?.

உங்களின் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.

Thursday, August 28, 2008

தினம் ஒரு குறள்

சமீபத்தில், எனக்கு ஒரு திருக்குறள் புத்தகத்தை பரிசாக கொடுத்தார் ஒருவர். தினம் ஒரு குறள் படித்து, அதனை இங்கு பதிவும் செய்யலாம் என்ற எண்ணம் உண்டு.
உங்களின் விருப்பம்?

Wednesday, July 30, 2008

Recent activities

I have resolved to do something productive in using the time available to me by reading books and articles,watching movies etc.

Following topics got my attention,


1. Nuclear Deal (India,US,China and rest of the world's perspective)

2. Fidel Castro
3. Che guevara
4. LTTE and Tamil Eelam
5. Nokia
6. Who Will cry when you die? (self-help book)
7. How to reduce expenses?. (Not at all useful in indian context)
8. Pregnancy and Normal birth.
9. Practical Cryptography
10. Sherlock Holmes.
11. Naan Saravanan, Vidya (livingsmile vidya's book)
12. Thirukkural.
13. Ayngurunooru

Besides, I also invested my time in watching movies, Recently watched movies,

1. I am Legend
2. Tom N Jerry
3. The Departed
4. Final Destination
5. Bourne Identity
6. Enemy at the gates
7. Dhasaavadhaaram (Tamil)
8. Pandy (Tamil)
9. If it rains again (Tamil documentary)

10. Partner (Hindi)

படித்ததால் பிடித்தது - நாலடியார் பாடல்

சமீபத்தில் ஆறாம் வகுப்பு தமிழ் புத்தகம் ஒன்றை புரட்ட நேர்ந்தது, எவ்வாறு தற்போதைய பாட புத்தகங்கள் உள்ளன என்ற ஆவல் முன்னேயுந்த புரட்டியதால் ஏற்பட்ட விளைவே இந்த பதிவு.
பாடல் (ஞாபகத்தில் உள்ள வரிகளே இங்கு , தவறுகள் இருக்க வாய்ப்புகள் உண்டு )
நல்லார் எனத்தான் நனிசெய்து கொண்டாரை
அல்லார் எனினும் அடக்கிக்கொளால் வேண்டும்
நெல்லுக் குமியுண்டு நீருக்கு நுரையுண்டு
புல்லிதழ் பூவிற்குமுண்டு
( யாரேனும் இப்பாடலுக்கு அர்த்தம் சொல்ல முயன்றால் நலமாய் இருக்குமே? இல்லையேல் நானே இந்த பதிவில் பின்னர் பதிவு செய்கிறேன்.)
பொருள் :
நல்லவர் என நாம் ஒருவரை நினைத்து அவருடன் நன்கு பழகி வரும்போது ஒரு சில நேரங்களில் அவர்களிடம் உள்ள சில கெட்ட பழக்கங்களைப் பார்க்க நேரிடலாம். அவ்வாறு நாம் காணக்கூடிய தருணங்களில் அவர்களை பற்றி நமது கருத்துக்களை மாற்ற வேண்டிய தருணம் வந்துவிட்டதாக நினைத்து அவர்களை கெட்டவர்கள் எனப்புரிந்து கொள்ளலாம். ஆனால், நாம் அவ்வாறு நினைப்பதற்கு முன்பு பின்வருவனவற்றை நமது மனதில் இருத்தி நினைத்தோமேயானால் அவர்களை தவறாக நினைப்பதற்கு பதிலாக உலக நியதியை புரிந்து கொள்ள இயலும்.
நெல்லுக்கு இருக்கும் உமி போன்றும் ,நீருக்கு இருக்கும் நுரை போன்றும், பூவில் இருக்கும் வாசமில்லா இதழ் போன்றும், மனிதர்களிடமும் ஒரு சில குறை கண்டால் அதனை நாம் பொருத்துக்கொள்ளலே நலம்.