Showing posts with label கேள்விகள். Show all posts
Showing posts with label கேள்விகள். Show all posts

Thursday, May 13, 2010

தலையங்கம்: நம்பிக்கைத் துரோகிகள்...(தினமணி தலையங்கம் உணர்திடும் உண்மை என்ன? )


தினமணி தலையங்கம் உணர்த்திடும் உண்மை என்ன?

தலையங்கம்

தலையங்கம்: நம்பிக்கைத் துரோகிகள்...


First Published : 13 May 2010 12:00:00 AM IST

Last Updated : 13 May 2010 01:14:06 AM IST

இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும் ராணுவத்துக்கும் நடந்த போர் முடிந்து ஓராண்டு நிறைவடையும் இந்த நேரத்தில் வேறொரு விதமான தாக்குதலை தமிழர்கள் மீது தொடுத்திருக்கிறது ராஜபட்ச அரசு.தமிழர்கள் உள்ளிட்ட சிறுபான்மை மக்களுக்கு கெüரவமான பிரதிநிதித்துவம் அளித்துவந்த விகிதாசார பிரதிநிதித்துவ முறையைக் கைவிடுவதற்கு இப்போதுள்ள அரசியல் சட்டத்தைத் திருத்துவது என்பதுதான் அது.இந்தியா உள்ளிட்ட நாடுகளில் கடைப்பிடிக்கப்படும், தொகுதியில் அதிக வாக்குகள் பெற்று முதலிடம் பிடிக்கும் வேட்பாளரே வெற்றியாளர் என்ற தேர்தல் முறைக்கு இலங்கையும் மாறவிருக்கிறது.மேலோட்டமாகப் பார்க்கும்போது இதில் என்ன குறை என்றே கேட்கத் தோன்றும். இந்தியாவைப் போல பல்வேறு மொழி, இன குழுக்கள் அதிக எண்ணிக்கையில் இல்லை என்றாலும் இலங்கையில் சிங்களர், தமிழர்கள், முஸ்லிம்கள் என்ற 3 இனங்களே முக்கியமானவை. கல்வியிலும் பொருளாதாரத்திலும் முன்னேறிய கடும் உழைப்பாளிகளின் வளர்ச்சியை சிங்களர்களால் சகித்துக் கொள்ள முடியாமல் போனதால்தான் அங்கு இனப் பகையே மூண்டது.இப்போது தமிழர்களின் பகுதிகளில் சிங்களர்களைக் குடியமர்த்தும் நடவடிக்கைகள் நேரடியாகவும் மறைமுகமாகவும் வேகவேகமாக நடந்து வருகின்றன. அதற்காகவே இன்னமும் ஏராளமான தமிழர்கள் முள்வேலி முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். வடக்கிலும் கிழக்கிலும் தமிழர்கள் விட்டுவிட்டுப் போன ஊர்களிலும் வீடுகளிலும் இப்போது சிங்களர்கள் குடியிருக்கின்றனர். விவசாயம் செய்யவும் அவர்களுக்கு நிலங்கள் தரப்படுகின்றன. இந்தப் பின்னணியில்தான் விகிதாசாரப் பிரதிநிதித்துவத்துக்கு முற்றுப்புள்ளி வைத்து, அதிக வாக்குகள் பெற்ற வேட்பாளரை வெற்றியாளராக அறிவிக்க சட்டம் திருத்தப்படுகிறது. தமிழர்களின் பகுதிகளில்கூட சிங்கள வேட்பாளர் அதிக எண்ணிக்கையில் வாக்குகளைப் பெறுவது என்பது இனி சாத்தியமே. சிங்களர்களைக் குடியேற்றுவதால் மட்டும் உடனடியாக இதைச் சாதிக்க முடியாது என்பதால், இப்போதுள்ள நாடாளுமன்ற, சட்டமன்றத் தொகுதிகளையும் பிரித்து மறுவரையறை செய்யும் பணியும் தொடங்கவிருக்கிறது.அதில் தமிழர்கள் நெருக்கமாக வசிக்கும் பகுதி ஒரே தொகுதிக்குள் வராமல் சிங்களர்கள் பெரும்பான்மையினராக உள்ள தொகுதிகளில் பரவலாகச் சேர்க்கப்படும் முயற்சிகள் தொடங்கிவிட்டன.225 உறுப்பினர்களைக் கொண்ட இலங்கை நாடாளுமன்றத்தில் தமிழர்களுக்குப் பிரதிநிதித்துவம் குறைந்துவிடுமே என்று கூறுவோருக்குப் பதில் அளிக்கவே, 25 உறுப்பினர்களைக் கொண்ட செனட் என்ற மேலவையைக் கொண்டு வரப்போவதாக அரசு அறிவித்துள்ளது. இதில் அறிஞர்களும்,சிறுபான்மைக் குழுக்களின் பிரதிநிதிகளும் இடம் பெறுவர் என்கிறது அரசு. இதில் அரசின் நியமன உறுப்பினர்களும் இருப்பார்கள்.என்னதான் பிரதிநிதித்துவம் தரப்பட்டாலும் இந்த அவைக்கு அதிகாரங்கள் குறைவுதான். எனவே இதில் இடம் பெறுகிறவர்கள் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டாலும் கூட இந்த அவையின் அந்தஸ்து என்பது நாடாளுமன்றத்தைப் போல இல்லை என்பது வெளிப்படை.அதிபராக இருப்பவர் இருமுறைதான் அந்தப் பதவிக்கு வர முடியும் என்று இப்போதுள்ள அரசியல் சட்டத்தைத் திருத்தவும் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. இது, இப்போதுள்ள அதிபர் மகிந்த ராஜபட்சவை ஆயுள்கால அதிபராக்கும் முயற்சி என்றே கூறிவிடலாம்.இந்த திருத்தங்களின் நோக்கம் எல்லோருக்கும் தெரிந்த நிலையில், இனப் பிரச்னைக்குத் தீர்வு காணும் நோக்கில்தான் இந்த நடவடிக்கைகள் என்று இலங்கை அரசு கூறுவதுதான் இரக்கமற்ற நகைச்சுவை.இலங்கை இனப் பிரச்னைக்கு அரசியல் தீர்வு காண ராஜீவ் காந்தியும் ஜெயவர்த்தனவும் செய்துகொண்ட ஒப்பந்தம் பற்றி இப்போது பேச்சே கிடையாது.தமிழர்களை இலங்கை மீது உரிமையுள்ள இனமாக அங்கீகரிக்கும் பேச்சோ, வடக்கும் - தெற்கும் அவர்களுடைய பாரம்பரிய தாயகம் என்பதை ஒப்புக்கொள்ளும் பெருந்தன்மையோ, தமிழர்களின் பகுதிகளுக்கு அதிக அதிகாரங்களை வழங்கி வளப்படுத்தும் நோக்கமோ, வடக்கையும் தெற்கையும் இணைத்து தமிழர்களின் கோரிக்கைகளை முழுமையாக இல்லாவிடினும் ஆறுதல் கொள்ளும் வகையிலாவது நிறைவேற்றும் நல்லெண்ணமோ இலங்கை அரசுக்கு இல்லை என்பது அப்பட்டமாக வெளிப்படுகிறது.இந்த நிலையில்,கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் தமிழர்களுக்கு இலங்கை அரசு எத்தகைய சலுகைகளையும் சமவாய்ப்புகளையும் இனி அளிக்கப்போகிறது என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது.தமிழர்களைத் தங்களுடைய சகோதரர்களாக பாவிக்காமல் எதிரிகளாகவே கருதுகிறது இலங்கை அரசு என்று அதன் சில நடவடிக்கைகள் உணர்த்துகின்றன.ராணுவத்துடனான போரில் இறந்த வீரர்களின் சமாதிகளை வடக்கிலும் கிழக்கிலும் அமைத்த விடுதலைப் புலிகள், மாவீரர் தினத்தில் அவர்களுக்கு அஞ்சலி செலுத்திவந்தனர். இப்போது அந்தச் சமாதிகளை இடித்து அப்புறப்படுத்திவிட்டு இலங்கை ராணுவ வீரர்களுக்கு நினைவிடங்களை அமைத்து வருகிறது இலங்கை அரசு. தமிழர்களோடு சமரசமாகப் போக வேண்டிய அவசியமும்கூட, கடமையும் தங்களுக்கு இருப்பதாக இலங்கை அரசு கருதவில்லை என்பதையே இந்தச் செயல்கள் உணர்த்துகின்றன.இலங்கையில் இப்போது நிலவும் அதிபர் ஆட்சிமுறை என்பதே பெரும்பான்மையினரின் ஆட்சிமுறை என்பதுதான் உண்மை. பெரும்பான்மை சிங்களவரின் ஆதரவைப் பெற்றால் மட்டுமே, அமெரிககாவில் பராக் ஒபாமா அதிபரானதுபோல, ஒரு தமிழர் இலங்கையின் அதிபராக முடியும். இப்போது நாடாளுமன்றத்திலும் தமிழர்களும் சிறுபான்மையினரும் குரலெழுப்ப முடியாத நிலைமைக்கு புதிய அரசியல் சட்டத்திருத்தம் வழிகோலப் போகிறது.இத்தனைக்கும்பிறகு இந்திய அரசு இது அன்னிய நாட்டு விவகாரம் என்று தலையிடாமல் தவிர்ப்பது ஏன் என்பதும், அப்பாவி ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகச் செயல்படத் தயங்குவது ஏன் என்பதும் புதிராக இருக்கிறது. "விடுதலைப் புலிகளைத்தான் எதிர்க்கிறோம். அப்பாவி ஈழத் தமிழர்களை அல்ல' என்று சொன்னதெல்லாம் பொய்தானே?தமிழனென்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா.

Thursday, August 20, 2009

Tamil kavithaigal

அது காதலாகுமா?
================

நான் உன்னை விட்டு விலகும் போதெல்லாம்
முன்னிலும் நெருங்கியதாகவே உணர்கிறேன்


உனக்குக் கொடுத்த வாக்கை காப்பாற்றுவேன்
என்று முன்னிலும் உறுதியாகவே
இறுதியாகவே கூறினாலும்
ஒவ்வொரு முறையும் தோற்றுப் போகும் நான்
வெட்கமென்பதே அறியாதவனாயிருக்கிறேன்


என்னையும் அறியாமல் நான்
இவ்வாறு இருப்பதற்க்கு காரணம்
என்னை ஆட்டிப் படைக்கும் சக்தியே
அது தான் காதல் என்றால்
அது இல்லாமல் போக
நான் தான் இல்லாமல் போக வேண்டுமா?


அன்புக்குரியவளை
ஆட்டிப் படைத்து
உடலையும் உள்ளத்தையும்
உருக்குலைக்கும் அது தான்
என் காதல் என்றால்
அது காதலாகுமா?

Wednesday, August 5, 2009

மீண்டும் ஆரம்பம்....

மே மாதம் பதினாறு, பதினேழு மற்றும் பதினெட்டு திகதிகளில் நடந்த கொடுமைகளை அடுத்து மனது எதிலும் நாட்டம் கொள்ளாமல் அலை பாய்ந்தது, உலகமே பார்க்க நடந்தேறிய கொடுமைகளைக் கண்டு , உலகத்தின் மீதே கோபமும், வெறுப்பும் கூடியது...

உலகத்தின் நியதிகள் எப்படி நிர்னயிக்கப் படுகின்றன எனபதற்க்கு சாட்சியங்கள் கூற இனி எவரும் தேவையில்லை !!!

நியாயம் பற்றிப் பேசும் தகுதியை அது இழந்து நாட்கள் பல ஆகிறது...

மனச்சாட்சி மண்ணாங்கட்டியாகிய கதை இதுதான் போலும்...

அன்றைய கொடுமையான நாட்கள் இப்பொழுது வரலாறு ஆகி போனது...

முன்னைய வரலாறுகள் மண்ணாகிப் போனது...

உலகத்தால் சாகடிக்கப்பட்ட ஆத்மாகள்...அப்படியே இருந்து பட்டு போகட்டும்...

இனி நம்மால் என்னதான் செய்ய முடியும்?

அனைத்தையும் மீறி ,இனி நாம் என்னதான் செய்யப் போகிறோம்!!!

Monday, May 11, 2009

யாருக்கு உங்கள் ஓட்டு?

பாருங்கள் , சிந்தியுங்கள் , வாக்களியுங்கள்

Monday, February 23, 2009

UGLY face of WAR

I am reproducing the Article that i happen to read from "Los angels times"....brings forth the other side of "Glorious victories" sinhala Govt is talking about....its really disheartening to know, how these ordinary citizens are misled by chauvinistic Lankan government....May all these souls lost in this ruthless WAR may R.I.P.

A military surge brings predictions of defeat for Tamil Tiger separatists. But many missing are among the casualties of the quarter-century conflict, and there could be more.
By Mark Magnier 
February 22, 2009
Reporting from Kuliyapitiya, Sri Lanka -- The white tattered strips line the main road to Kuliyapitiya, hanging off telephone poles and fence posts, each one signifying another funeral, another loss, another hole punched in the heart of a family. A few miles away, in the center of town, ribbons of another sort decorate the chest of a commando at a recruiting post working to impress a group of teenage boys. 

A recent surge by the Sri Lankan army, boosted by an aggressive expansion of its forces, has prompted the government to predict that victory is just around the corner in its 25-year war with the Tamil Tiger rebels who have sought to carve out a homeland in the north and east of this island nation.

Amid the rising euphoria, however, some question whether these hardened fighters will go away that easily, whether the human toll will really end, whether the white ribbons will stop fluttering at every turn.

Sri Lanka has paid a huge price, in economic loss, social and political strain, destroyed infrastructure and human lives, for its long civil war. Almost everyone in this nation of 20 million has been touched. 

But it's the rice- and coconut-growing areas such as Kuliyapitiya district with its 150,000 population that have paid the highest toll. The government's all-volunteer army has found fertile ground for recruiting in rural areas where job prospects are limited and the army offers adventure, a uniform and a decent paycheck of about $200 a month. "Join the winning side," says a nationwide radio advertisement.

Recently, funerals in these parts have been running about two or three a week, said Chandana Bulathsinhala, an aide to the local opposition lawmaker, adding steadily, relentlessly, to the area's estimated 5,000 casualties since the war's inception -- a staggering one in 30 people. 

Bulathsinhala estimates that 99% of the recruits sign up for economic reasons, with many schoolchildren now wanting to be soldiers rather than doctors or lawyers.

"War is always cruel, but the media has promoted good war news, so more people are encouraged to join," he said.

As families in the community confront the human toll, the war machine continues to draw in new recruits. At the Kuliyapitiya Urban Council complex in town, a bus ringed with loudspeakers and posters of fighting men lures new enthusiasts.

"When you come to the interview, bring your stuff and be ready to go," advises a nearby poster showing a soldier in a Rambo-style pose. 

A few miles away, Kusuma Gunawardana sits on a hard bed trying to make sense of it all, a cat curled at her side, tears running down her worn face. Her son, a soldier in the Sri Lankan army, has been missing since mid-January. Nationwide, the missing number in the thousands, the result of desertions, front lines that have shifted repeatedly and dense jungle that can decompose a body in rapid order.

Nor is she sure she can believe what the government news channels say. Her older son, also in the army, told her the situation is often significantly different from the rosy images beamed on the channels. She just wants her family back. "I can't think about what happened to my son," she said. "I believe he's still alive."

Down the road, Jayantha Perera, 33, has doubts about a quick end to the war, but for different reasons. It's been going on so long that to him the wrapping-up seems too fantastic. As he talks in a living room decorated with a military calendar and the family's foot-powered sewing machine, he remembers the pride he felt when his older brother Samantha left for the war. 

Samantha hasn't been heard from in more than a decade and is presumed dead, one of the 4,000 soldiers and 12,000 Sri Lankan civilians and fighters with the Liberation Tigers of Tamil Eelam missing in the war, according to estimates by the Assn. of War Affected Women, a civic group based in the city of Kandy.

As he talks, Perera's aging father suddenly erupts into a wail of grief. It happens two or three times a day, Perera says; he's been on a downward slide since his son's disappearance. The family no longer keeps pictures of Samantha around, except for one fading shot of his regiment, to avoid upsetting his father even more. 

Farther down the back roads of the community, posters glorify those who died as placards urge citizens to donate blood, using pictures of neighbors who have already signed up and shipped out as an incentive. "Brother you have not died, you bloom as a flower among us," reads a poster marking the death of a commando who died recently at Elephant Pass. 

A few feet from the commando with a chestful of ribbons, Koolitha Manchanayaka, 19, waits by the recruiting bus talking to friends after signing up. The teenager is accompanied by his father and a cousin and is ready to fulfill a dream he's had since he was 17. 

His parents were reluctant to let him go, he said, but he eventually persuaded them after promising to be careful. For added security, he wears a 
pirith cord, a string worn around the wrist, blessed by monks at a nearby Buddhist temple.

Sure, there is a risk that he will be captured or killed, he said. "It could happen to anyone, but I'm not scared," he said, his eyes alight with excitement. "This is the right time to go. If I'm not involved at this decisive time, there's no point."

The military added 40,000 recruits in each of the last two years, said Brig. Udaya Nanayakkara, a military spokesman, to reach the current 180,000 level for the armed forces.

Those with missing family members receive a death settlement after one year of about $750 for single soldiers and $1,500 for married, along with other pension and insurance payouts.

Laborer K.G. Salen Fernando, 63, of Galkapuyaya village, said his family didn't receive anything from the government when his son disappeared 17 years ago.

A decade or so back, the family finally conceded that their boy wasn't coming back, he said. But without ever seeing his body, the realization was very difficult to accept. "He died for the sake of the country, so I'm proud," the father said, through a toothless jaw. "But they didn't even give us 5 cents. We'd be happy if they paid us something."

Visaka Dharmadasa, the founder of the Assn. of War Affected Women, said the disappearance of one of her sons eight years ago was the catalyst for starting the group, which aims to make the government and the International Committee of the Red Cross more accountable on MIA issues. 

The association now numbers 2,000 members. Even though it's been nearly a decade since she last saw her missing son, she said she still waits expectantly. "There's always hope," she said. "It's not going to help anyone when you deny the existence of a person."

Gunawardana's agony is still fresh, as she reflects on Tamil mothers on the other side who must be experiencing some of the same pain.

"In the north, they're going through the same suffering we have," she said. "We are running out of boys in this country. We don't need a war with the north to lose more children."


Courtesy : LosAngels times  Reach Author : mark.magnier@latimes.com

Thursday, February 12, 2009

தமிழினத் துரோகம் - கண்டு கொள்ளுங்கள் துரோகிகளை மக்களே !!!

தமிழினமே! பார், இந்த வரலாற்றுத் துரோகத்தை! - புரட்சிப்பெரியார் முழக்கம்
[ வியாழக்கிழமை, 12 பெப்ரவரி 2009, 10:11.22 AM GMT +05:30 ]


தமிழக மக்களிடத்தில் ஈழ ஆதரவு மேலோங்கி வரும் இந்நிலையில் அதை கெடுக்கும் வகையில் தமிழின விரோத மற்றும் துரோக சக்திகள் தமிழீழ விடுதலைப்போராட்டத்தினை கொச்சைப்படுத்தியும் தமிழக மக்களின் ஆதரவை திசை திருப்பியும் தமிழ்மக்களது எழுச்சியை கெடுக்கும் வேலையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

அக்டோபர் முதல் வாரத்தில் அதாவது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முன் முயற்சியால் அக்.2 ஆம் தேதி அனைத்துக் கட்சியினர் நடத்திய உண்ணாவிரதத்துக்குப் பிறகு மயிலை மாங்கொல்லையில் முதல்வர் கலைஞர் கருணாநிதி தி.மு.க. கூட்டத்தைக் கூட்டி, மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்தார். என்ன கூறினார்? ஈழத்தில் போர் நிறுத்தம் செய்ய மத்திய அரசு வலியுறுத்த வேண்டும். இரண்டு வார கெடுவுக்குள் போர் நிறுத்தம் வரா விட்டால், நாடாளுமன்ற உறுப் பினர்கள் பதவி விலகுவார்கள் என்றார். தொடர்ந்து, தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும், தங்கள் பதவி விலகல் கடிதத்தை முன் கூட்டியே கலைஞரிடம் தரத் தொடங்கினர்.

மனிதச் சங்கிலி போராட்டம் நடத்தி, இதே கோரிக்கை வலியுறுத்தப் பட்டது. அதற்கும் மத்திய அரசு அசையவில்லை. அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டினார். மீண்டும் போர் நிறுத்தம் வலியுறுத்தப்பட்டது. வெளிநாட்டுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி இலங்கைக்கு சென்று போர் நிறுத்தத்தை வலியுறுத்த வற் புறுத்தப்பட்டது. முதல்வரை சந்திக்க சென்னை வந்த பிரணாப் முகர்ஜி யிடமும் நேரில் வலியுறுத்தப்பட்டது. பிரணாப் முகர்ஜி இலங்கை போக வில்லை. நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகலுக்கான கெடு முடிந்ததும், அத்திட்டம் கைவிடப்பட்டது. அனைத்துக் கட்சியினரை அழைத்துக் கொண்டு முதல்வர் டெல்லி போய் பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்து நேரில் வற்புறுத்தினார். எந்தத் துரும்பும் அசையவில்லை. ராணுவத்தின் இனப் படுகொலை தொடர்ந்து கொண்டே இருந்தது; மேலும் மேலும் தீவிர மானது.

கிளிநொச்சியை ராணுவம் பிடித்தது. 3 லட்சம் மக்கள் விடுதலைப்புலி களோடு முல்லைத் தீவுக்கு இடம் பெயர்ந்தனர். முல்லைத் தீவையும் ராணுவம் சுற்றி வளைத்து குண்டுகளை வீசி வருகிறது. ஷெல் தாக்குதலை நடத்தி வருகிறது. உணவு, மருந்து பொருள்கள் இல்லை. 'போரில்லாத பகுதியாக' ராணுவம் அறிவித்தப் பகுதியிலும் குண்டு வீச்சு, ஷெல் வீச்சு தொடருகிறது. புதுக் குடியிருப்பில் உள்ள தற்காலிக மருத்துவமனை மீதே குண்டுகளை வீசி நோயாளிகளை பிணமாக்கியது சிங்கள ராணுவம். எங்கும் தமிழனின் மரண ஓலங்கள்; ரத்தவாடைகள்; பிணக் குவியல்கள்.

அய்.நா.வே போரை நிறுத்தக் கோரி தனது தூதுவரை போர் முனைக்கு நேரே அனுப்புகிறது. அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டனும், பிரிட்டன் வெளியுறவுத் துறை அமைச்சர் டேவிட் மிலிபேண்ட் என்பவரும் கூட்டாக இணைந்து போரை நிறுத்தக் கோரி அறிக்கை விடுத்தனர். ஜப்பான், நார்வே, ஜெர்மன் நாடுகளும் போரை நிறுத்துமாறு வேண்டுகோள் விடுத்தன. உலக நாடு களின் கோரிக்கையை ஏற்க முடியாது என்று, ராஜபக்சேயின் தம்பியும், ராணுவ செயலாளருமான கோத்தபய ராஜபக்சே அறிவித்து விட்டார். தமிழ் மக்களின் ராணுவமான விடுதலைப் புலிகள், தற்காப்பு யுத்தம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். உதவிக்குச் சென்ற சர்வதேச செஞ்சிலுவை சங்கத் தின் வாகனங்கள் மீதும், மருத்துவ மனைகள் மீதும் ராணுவம் குண்டு வீச்சு நடத்துகிறது. அய்.நா.வின் பிரதிநிதி களே போர்முனைப் பகுதிகளில் குண்டு வீச்சு காயங்களுக்கு உள்ளாகி விட்டனர்.

சர்வதேசமுமே கண்டிக்கும் இந்த இனப் படுகொலையைக் கண்டித்து, போரை நிறுத்தச் சொல்லாத நாடு இந்தியா தான். அதுவும் தமிழகத்தின் ஒருமித்த வேண்டுகோள், போராட்டங் களை அலட்சியப்படுத்தி, ஆணவச் சிரிப்பு சிரித்து வருகிறது. இவ்வளவுக் கும் பிறகும் இந்தியாவைக் கண்டித்தால் - ஒவ்வொரு நாளும் நடக்கும் இனப் படுகொலையைத் தடுத்து நிறுத்தக் கோரினால் - சிங்கள இனப்படு கொலைக்கு எதிரான குமுறலை தி.மு.க. ஆட்சிக்கு எதிரான 'அரசியல்' என்கிறது - தி.மு.க. தலைமை!

"மத்திய அரசை எதிர்க்கவே கூடாது; தொடர்ந்து வலியுறுத்த வேண்டும்" என்று மீண்டும் தோல்வி கண்ட "வலியுறுத்தல்" பாதையிலேயே பயணம் செய்ய கலைஞர் கருணாநிதி அழைக்கிறார். தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி நீடிக்க வேண்டும் என்ற அற்ப அரசியல் லாபத்துக்காக அன்றாடம் நடக்கும் "இனப் படுகொலை"யை எதிர்த்துப் போராடக் கூடாது என்கிறார்கள்.

மத்திய அரசு - இனப்படு கொலையை தடுக்க வேண்டும் என்று மனம் திருந்தும் காலம் வரை காத் திருக்க வேண்டும் என்கிறார்கள். தி.மு.க. உருவாக்கியுள்ள 'இலங்கைத் தமிழர் நல உரிமைப் பேரவை' நடத்தியுள்ள கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகன் இவ்வாறு பேசியுள்ளார்:

"நம்முடைய குரலை, நம்முடைய வார்த்தையை அவர்கள் மதிப்பார்களா என்பதையெல்லாம் எண்ணிப் பார்த்தால் நம்முடைய நன்மைக்காகத் தான் தமிழ் நாட்டில் கலைஞருடைய ஆட்சி எப்படி இருக்க வேண்டும் என்று கருதுகிறோமோ, அப்படித்தான் டெல்லி யிலே சோனியாகாந்தி வழிகாட்டு தலிலேயே மன்மோகன்சிங் அரசு நீடிக்க வேண்டுமென்று விரும்புகிறோம்" என்று பேசியுள்ளார் ('முரசொலி' பிப்.10)

'தமிழர் நல உரிமைப் பேரவை' என்ற பெயரில் நடைபெறும் கூட்டங் களில் 'தி.மு.க. கூட்டணி நலன்கள்தான்' முன்னிறுத்தப்படுகிறதே தவிர, ஈழத் தமிழர் இனப் படுகொலை பற்றியோ இந்தியாவின் துரோகம் பற்றியோ சிங்கள அரசை கண்டித்தோ, கருத்துகள் முன் வைக்கப்படுவதில்லை. இதை பேராசிரியர் அன்பழகனே, தனது உரையில் ஒப்புக் கொண்டு இருக்கிறார்.

"இங்கே பேசிய நண்பர்கள்.... வருங்காலத்திலேகூட தமிழகத்திலே கலைஞருடைய கையைத்தான் வலி யுறுத்த வேண்டும். தேர்தலிலே ஏமாந்து விடக் கூடாது என்பதை யெல்லாம் எடுத்துச் சொன் னார்கள். அது ஓரளவுக்கு அரசியல் தான். அந்த அரசியலை கழகம் சார்பாக இன்றைக்கு நான் பேசத் தயாராக இல்லை" ('முரசொலி' பிப்.10)

- என்று பேசியிருப்பதன் மூலம், "இலங்கைத் தமிழர் நல உரிமைப் பேரவையின் பரப்புரை எப்படி நடக்கிறது என்பதை அவரே வெளிப் படுத்தியுள்ளார். அப்படிப் பேசிய பேராசிரியர் அன்பழகனோ முடிவில் எதைப்பேச மாட்டேன் என்றாரோ, அதே அரசியலைத்தான் அவரும் வலியுறுத்தியும் உள்ளார்.

ஒவ்வொரு நாளும் தமிழர்கள் மீதான இனப் படுகொலைகளைப் பற்றியோ
போரை நிறுத்த வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தியோ
வீதியெங்கும் விமான குண்டு வீச்சுக்கு ஷெல் தாக்குதலுக்கும் பலியாகி பிணமாகக் கிடக்கும் தமிழினத்தைப் பற்றியோ
மருத்துவமனைகள் மீதே குண்டுகள் வீசப்படுவது பற்றியோ


- இவர்கள் மக்களிடம் பேசுவதற்கு தயாராக இல்லை. காங்கிரசுக்காரர் களோடு கைகோர்த்துக் கொண்டு, 'மத்திய அரசுக்கு ஆக்கமும் ஊக்கமும் தரவேண்டும்" வரப்போகும் தேர்தலில் தி.மு.க. - காங்கிரஸ் ஆட்சிகளுக்கு வாக்களிக்க வேண்டும் என்று பேசி வருகிறார்கள். விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் மீது சேறு வாரி இறைக்கப்படுகிறது. ஆனால் ராணுவக் கொடுமைகள் அடக்கி வாசிக்கப்படு கிறது. இதற்குப் பெயர் இலங்கைத் தமிழர் நல உரிமைக் கூட்டமைப்பாம்!

தமிழின உணர்வாளர்களே! இந்த வரலாற்றுத் துரோகத்தை அடையாளம் காணத் தவறாதீர்கள்!
courtesy : tamilwin.com

Saturday, January 31, 2009

Getting due respect as Tamil in Srilanka?

We know that Muthukumaran has done a supreme sacrifice of giving his life for the cause of Tamils. He knew what he is doing?. How this news is being taken by chauvinist Srilankans. How these sinhalese are motivated towards Tamils?.

 please do click on this link to know what "comments" have been for the NEWs of Muthukumaran's  martyrdom.


Oh holy cow! World !!! Do you still advocate to live amicably with these chauvinists?

Monday, December 8, 2008

WAR on TERROR? (updated)

For past few months, I have been concentrating on articles and news items on "War on Terror" and "Terrorism"...

Terrorism - I feel, this word is used politically by those in "Authority" against those "who oppose them". The way the Imperial goverments have framed/shaped the "world view" greatly assisted by large portion of propaganda taken forward by media. Repeated well "worded propaganda" has already done its job very well tilting the "Mass opinion" towards those machineries.

There are very few meek voices heard against such oppressors in trying to bring about the TRUTH.Even "world bodies" which supposed to be NEUTRAL and ARBITRATOR almost ALWAYS REMAIN a MUTE spectator. Why?. What could be the reason?. Why UN doesn't actually intervene and contempt such heinous acts?.Is it that UN doesn't have any power to intervene when inhuman acts of mass killings and genocide happening. who stop them from intervening?. Is there any other world body that exists on earth or Universe which could do so?.

As a normal citizen of sovereign country, I may now feel SAFE, but what if the same starts happening to me and my fellow country men?. I try my best to see the "politics" behind all this atrocities, the motives of each parties involved in conflict.

In a broder perspective, Why would one man have to or Need to kill another?. or one faction of people have to go against other faction of people, like that happened in Gujarat ( I here mean, both hindus and muslims), Bosnia, Iraq, Iran, palestine and Isreal. Not least the current heated conflict happening in Lanka.

pictures speak more than words, Following are some of the footages I happened to see in youtube, for your view.


  • "The Killing Zone"


more videos will be uploaded later

Wednesday, November 5, 2008

ஒபாமாவுக்கு சில கேள்விகள்

இன்று நான் சிலரது பதிவுகளை காண நேரிட்டது, அவ்வாறு பார்த்த பதிவிலிருந்து ஒரு சில
"ஒபாமாவுக்கு சில கேள்விகள்" , கேள்விகள் மிகவும் அருமையாக இருந்ததால் அப்பதிவிலிருந்து உங்களுக்காக இதோ :
௧. அமெரிக்க நகரங்கள், குடியிருப்புகள், உணவு விடுதிகள், காவல் துறை , வேலை வாய்ப்பு, நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகள் முதலான ஒட்டு மொத்த அமெரிக்காவில் வேர் கொண்டு இருக்கும் வெள்ளை நிறவெறி இனிமேல் இல்லாமல் பூஇவிடுமா?
௨. வறுமைக் கோட்டுக்கு கீழே வாழும் அமெரிக்கர்களில் பெரும்பான்மையினரும், அமெரிக்கச் சிறைகளில் மஜாரிட்டியகவும் இருக்கும் அமெரிக்க - ஆப்பிரிக்க மக்களின் யதார்த்தம் இனிமேல் மாறிடுமா?
௩. பெண்கள் மீது பாலியல் வன்முறைகளில் உலக அளவில் முன்னணியில் இருக்கும் அமெரிக்காவில் இனி பெண்களுக்கு பாதுகாப்பு கிடைத்து விடுமா?
௪. கிளின்டனில் தொடங்கி புஷ் வரை ஈராக்கையும் , ஆப்கானையும் ஆக்கிரமித்து நடத்தப்படும் போரை நிறுத்துவாரா?
மேலும் காண்க நன்றி