Sunday, November 4, 2012

தேடல்-தமிழ் காதல் கவிதைகள் - Tamil Kadhal kavithaigal



தேடல்-------------
அன்பே !! நீ என்னுடன்
  இல்லா ஒவ்வொரு
  
தருணமும் நானோ
  

தேடுகிறேன் உன்னை - என்னில்
  
நீ என்னுடன்
இருக்கும் ஒவ்வொரு
  
தருணமும் நானோ
  
தேடுகிறேன் என்னை - உன்னில்

Thursday, November 1, 2012

படித்ததால் தெரிந்து கொண்டது ---- அன்பை அடையாளங்காணல்

அன்பை அடையாளங்காணுதல் எப்படி? இப்படி !!! :)



”குடத்துள் விளக்கும் தடற்றுள் வாளும் போல

இதுகாண் அன்பு என்ரு போதத் திறந்து காட்டாலாகாது.

அன்புடையரான குணக்கண்டவிடத்து இவை உண்மையான

ஈங்கு அன்பு உண்டென்ரு அனுமித்துக் கொள்ளற்பாற்று!!

அன்புடையரான குணம் யாவையோ எனின்...


  • சாவிற் சாதல்
  • நோவின் நோதல்
  • ஒண்பொருள் கொடுத்தல்
  • நன்கினிது மொழிதல்
  • புணர்வு நனிவேட்டல்
  • பிரிவு நனியிரங்கல்
என இவை”   (இது அக்கால உரை நடை, இதுகாற் கொண்டு, இக்கால பொருள் படும் படி கீழ்காண்க)


பொருள் : 

 குடத்துள் விளக்கு, உரைக்குள் கத்தி போல.... இதுதான் அன்பு என்று அறியுமாரு திறந்து காட்ட முடியாது. அன்புள்ளவரின் 

குணங்களைப் பார்க்கும் போது இவை இருப்பதால் (உண்மையாய்) இங்கே அன்பு இருக்கிறது என்று அறிந்துகொள்ள முடியும். அன்புள்ளவரின் குணங்கள் என்னென்ன என்றால்..

  • சாவிற் சாதல்
  • நோவு வந்தால் வருத்தப் படுதல்
  • பொருள் உதவி செய்தல்
  •  நல்லதாய் இனிமையாய் பேசுதல்
  • சந்தித்தலை விரும்பல்
  • பிரிவில் வருந்தல்    
என்பனவாம்.”


(சுஜாதாவின் கற்றதும் பெற்றதும் - பாகம் IV பக் : 103)



படித்ததால் தெரிந்து கொண்டது - பாலிண்ட்ரோம்

தமிழில் காணக் கிடைக்கும் ஒரு பாலிண்ட்ரோம் (இதற்க்கான தமிழாக்கம் என்ன?) திருஞான சம்பந்தரால் எழுதப்பட்டதாக படித்ததில் தெரிந்து கொண்டது.


“யாமாமா நீ யாமாமா யாழீ காமா காணாகா காணா காமா காழீயா மாமாயா நீ மாமாயா !”


பொருள் : சிற்றுயிரான நாங்கள் கடவுள் என்றால், பொருந்துமா? நீ ஒருவனே கடவுள் என்றால், பொருந்தும். ( சுஜாதாவின் கற்றதும் பெற்றதும் - பாகம் IV, பக் - 121)                                                    

உறக்கம் - தமிழ் காதல் கவிதைகள் - Tamil kaadhal kavithaigal

உறக்கம் 
------------
உனக்காய் மட்டுமே
எனது உறக்கம்
தொலைக்கிறேன்!
அவ்வுறக்கம் உன்னையும்
சேர்தலில்லை கண்டு
உளம் சோர்கிறேன்
என்னுடன் உறங்க
விருப்பம் சொன்னாய் நீ!
உறங்காத எனது எண்ணம்
சொலேன் நான் !!!

சமன்- தமிழ் காதல் கவிதைகள் - Tamil kadhal kavithaigal

சமன்
--------

உனது உதட்டோரப் புன்னகைக்கான

எனது காத்திருப்பின்

காரண காரியம்

சமனாகிறது

உனது புன்னகை

மலரும் அத்தருணத்திலேயே !!