Sunday, March 21, 2021

ஜென் பற்றி - புத்தர்

 ’ஜென்’ பற்றி புத்தர் கீழ்கண்டவாறு கூறுகிறார்....

“ அரசர்களையும் ஆட்சியாளர்களையும் நான் தூசிக் குவியலாகப் பார்க்கிறேன். தங்கம் மற்றும் நவரத்தினங்கள் உள்ளிட்ட செல்வங்களை நான் செங்கற்களாகவும் கூழாங்கற்களாகவும் பார்க்கிறேன். உயர்ந்த பட்டாடைகளை நான் கிழிந்த ஆடைகளாகப் பார்க்கிறேன். பிரபஞ்சத்தின் ஏழுலகங்களை பழங்களின் விதைகளாகவும், இந்தியாவின் மிகப் பெரிய ஏரியை காலடியில் இருக்கும் ஒரு துளி எண்ணையாகவும், உலகத்திலிருக்கும் போதனைகளை வித்தைக்காரர்களின் கண்கட்டு வேலையாகக் கருதுகிறேன்.

விடுதலையின் தத்துவத்தைக் கனவில் வரும் தங்க ஆடையாகவும், ஞானிகள் சொல்லும் புனித வழியை கண்ணில் தோன்றும் மலர்களாகவும் பார்க்கிறேன். தியானத்தை மலையின் தூணாகவும், ஆத்மாக்களின் ஐக்கியத்தை பகல் கனவாகவும் பார்க்கிறேன். சரி என்றும் தவறென்றும் தீர்மானங்கள் எடுப்பது பாம்பு நெளியும் திசைகளை தீர்ப்புக்கு உள்ளாக்குவது போன்றது.  நம்பிக்கைகளின் வெற்றியையும் தோல்வியையும் மாறி வரும் பருவங்கள் விட்டுச் சென்ற நினைவுத் துளிகளாகப் பார்க்கிறேன்.”


மேற்சொன்னது பற்றி நூலாசிரியரின் கருத்து : 

“ உன்னை நம்பு. நிகழ்காலத்தில் வாழ். மனத்தை எப்போதும் காலியாக வைத்திரு. எதைக் கண்டும் அஞ்சாதே”

மூலம் -- கதைகளின் வழியே ஜென்.  ஆசிரியர். கே.ஜி. ஜவர்லால் (கிழக்குப் பதிப்பகம்)