Thursday, October 18, 2012

Points to Ponder !!!

"I do not care when u disturb me..But,
I get disturbed when u dont disturb me..!"

Monday, October 8, 2012

படித்ததில் பிடித்தது - தமிழ் காதல் கவிதைகள்

கூப்பிடு தொலைவில் நீ

என்ன சொல்லிக்

கூப்பிடுவது என்ற

தயக்கத்தில் நான்.

தெரிந்துகொள்ளும் ஆசை

காதலாகிப் போனது.

                 ( நன்றி : இரா. சரவணன்)

படித்ததில் பிடித்தது - தமிழ் கவிதைகள்

காத்திருந்து காத்திருந்து

சோர்கையில்

நீ வருவாய்

கோபப்படுவேன் நான்

வெட்கப்படத் தெரியாததால்.

காதல் தீபம்- தமிழ் காதல் கவிதைகள் - Tamil Kaadhal kavithaigal

காதல் தீபம்
----------------

விரும்பித்தான்

விழுகிறதோ

விட்டில் பூச்சியும்

தீபத்தில் !

காதலில் நானும்!!!

இன்றைய குறள் - ஊக்கம் உடைமை

 பரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானை
வேருஉம் புலிதாக் குறின். - அதிகாரம் : ஊக்கம் உடைமை



பொருள் : யானை கனத்த உருவம் (உடம்பை) உடையது, கூர்மையான தந்தங்களை உடையது. ஆயினும், ஊக்கமுள்ளதாதிய புலி தாக்கினால் அதற்க்கு அஞ்சும்.


பொருள் விளக்கம் : ஆளு எவ்வளவு பெரிசா இல்லா சிறிசான்கிறது முக்கியமே இல்லை !!! ”புலி” மாதிரி ஆக்கமும் ஊக்கமும் எவ்வளவு பெரிசு, அது தான் பெரிசு!!!  தாவீதும் கோலியாத்துக் கதை தான்!!! அடிக்கிற இடத்துல அடிக்கிய வேண்டிய விதத்தில் அடிச்சா ஆனையும் அலறும்!!! 



சுற்று- தமிழ் காதல் கவிதைகள் - Tamil kaadhal kavithaigal

சுற்று
---------

புவிக்கோர் சூரியன்

முழுமதிக்கோர் பூமி

எனக்கோ நீ !!!

படித்ததில் பிடித்தது - தமிழ் கவிதை


இரும்பிலும்

பூக்கள் பூக்கும்

ஜன்னலில்

உன் முகம்.

      ( நன்றி : அந்நியன்)

துடிப்பு- தமிழ் காதல் கவிதைகள் - Tamil kaadhal kavithaigal


துடிப்பு
========

உன்னருகே

இருக்கும் ஒவ்வொரு

தருணத்திலும் நான்

காந்தப் புலத்தில்

அகப்பட்ட

இருப்புத் துண்டாய்

துடிக்கிறேன்!

உனைச் சேர்தற்க்கே!!!

Saturday, October 6, 2012

வாழ்வு- தமிழ் காதல் கவிதைகள் - Tamil kaadhal kavithaigal

வாழ்வு
-----------

என்


உயிரிலும்

உணர்விலும்

நினைவிலும்

உறைந்து விட்டாய்

நீ!


நான்

உயிர்

வாழ்ந்ததும்

வாழ்வதும்

வாழ நினைப்பதும்

உன்னாலே !!

பெய்யெனப் பெய்- தமிழ் காதல் கவிதைகள் - Tamil kaadhal kavithaigal

பெய்யெனப் பெய்
-----------------------


சிறு மின்னல் கீற்றாய்

சிறு சிறு மழையாய்

துவங்கி

இடி மின்னலுடன் கூடிய

அடை மழையாய்

இடைவிடாமல்

பெய்யெனப் பெய்கிறாய் 

என்னில்

நீ !!

உயிர்மெய்-தமிழ் காதல் கவிதைகள் - Tamil Kaadhal kavithaigal

உயிர்மெய்
---------------


உயிர் காதல்

மெய் காமம்

காதலியே நாம் 

உயிர்மெய்யாவது

எப்போது!!!