Friday, August 31, 2012

புத்திசாலி பறவைகள் - Finding New ways

Fishing - Adapting to New Techniques




Cracking Nuts - Adapting to New Environment

உனக்கும் எனக்கும்- தமிழ் காதல் கவிதைகள் - Tamil Kaathal Kavithaigal


உனக்கும்  எனக்கும்
---------------------------

அழகே, நீ என்னை தடுத்திடும் போதும் ..
உன்னை நான் "மிஸ்" பண்ணாமல் இருக்க கற்றுகொடு !

தற்போதைக்கு ,
நம் சந்திப்பும் ,முத்த பரிமாறுதல்களும்
நிகழ்த்திட முடியாததாகவே
இருந்துவிடட்டும்  !
இல்லையென்றால்
அந்த காட்சியின் நினைவுகள் கூட
என்னை கொன்று விடக்கூடும்

எல்லா விதத்திலும் முயற்சிக்கிறேன்
உன்னிடம் உணர்த்திடவும் ,
உணர்த்தாமல் அப்படியே விட்டுவிடவும் !
உனக்கும்  எனக்கும் இடையில்
எந்த ஒரு உறவும் இல்லையென  நான் சொன்ன
சொற்களில் நிழலாக நகர்வது
உன் மீதான அதிக அன்பாகவே இருக்கிறது ...
முதல் நாள் அயலாய் வந்தாய்
மறுநாள் என் இரவுகளை தின்றாய்
பழகிட பழகிட அழகாய் வருகிறாய்
சில நிகழ்வுகளுக்கான காரணங்களை தருகிறாய்
எந்த காரணமும் இல்லாமல்
உன்னுடன்  ஒட்டிகொண்டிருகிறேன் !
                                                                                                                                நன்றி : மீனா

Wednesday, August 29, 2012

களங்கம்- தமிழ் கவிதைகள் - Tamil Kavithaigal

களங்கம்
-------------

களங்கப்படுத்தியவனையே

கல்யாணம் கட்டிவைப்பது

களங்கப்பட்டவளுக்கு

எவ்வகையில்

நியாயம்?.


மதி !


யார் சொன்னது
நிலா ஒளிரும் தேயுமென
தினம் தினம்
என் கண்முன்
முழுமதியாய் ஒளிருமிவள் யாரோ!!!

இம்மண்ணில்
பிரியமாய் இறங்கிய
இம்மதியின் மதிகண்டோ
வானின் நிலா வெட்கி
மறைகிறதோ!!!

Wednesday, August 22, 2012

சுமை- தமிழ் காதல் கவிதைகள் - Tamil Kaadhal Kavithaigal

சுமை
--------

கையில் உன்னை ஏந்தியபோது

திடுக்கிட்டு பயந்து சொன்னாய்

நான் மிகக் கனமென்று

தினம் தினம் சுமக்கிறேனே

உன்னை என் நெஞ்சில்

இதற்காய் என்ன சொல்வாய்?

Friday, August 17, 2012

வாகனப் பதிவெண்கள் தமிழில் - எவ்வாறு எழுதுவது?


தமிழ்த்தாய் வாழ்த்து


யுகங்கள் - தமிழ் காதல் கவிதைகள் -- Tamil Kaadhal Kavithaigal

யுகங்கள்
-------------

வானில் வட்ட நிலா

மறுமுறை தோன்ற

ஓர் பகலே!!!

சுட்டெரிக்கும் சூரியனுக்கோ

ஓரிரவே!!

உனைபிரிந்து மறுநாள்

வருவதற்க்குள்

கடினமாய் கடந்திடுதே

பல யுகங்கள் !!!

மௌனம் - தமிழ் காதல் கவிதைகள் - Tamil Kaadhal Kavithaigal

மௌனம்
-------------

என்னுடன் நீயிருக்கும்

தருணங்களில் வேகங்காட்டும்

என் கடிகை!

 நீ செல்லும்

அத்தருணத்திலே 

என் மனம்போல்

மௌனிப்பதேன்!!

Wednesday, August 15, 2012

படித்ததில் பிடித்தது - தமிழ் காதல் கவிதை

இதயமும் இடைவெளி

விட்டுத்தான்

துடிக்கும் அந்த

இடைவெளியும் உன்னைப்

பற்றித்தான்  நினைக்கும்...!!!


( நன்றி : இரத்தன்)

Tuesday, August 7, 2012

Tamil Kavithai

 உறவு

 நண்பர்களாய் சந்தித்து

 காதலர்களாய் பயணித்து

 கணவன் மனைவி போல் 

 வாழ்ந்த வாழ்வு

 “தொடர்பு” என்ற ஒற்றைச் சொல்லில்

  கள்ளமாய் முடிவுற்றது தினசரிகளில்.