Tuesday, September 25, 2012

உளறல்-தமிழ் காதல் கவிதைகள் - Tamil kaadhal kavithaigal

உளறல்
----------

எனது உளறல்கள்

அனைத்தையும்

அரிய கவிதை

என்கிறாய்!!!

கவிதைகளை

என்னவென்பாய்?

வித்தியாசம்- தமிழ் காதல் கவிதைகள் - Tamil kaadhal kavithaigal

வித்தியாசம்
-----------------

கடவுளுக்கும்

காதலியே உனக்கும்

கண்டேனே வித்தியாசம் !!

என் பார்வையில்

நீயோ எங்கும் !!

கடவுளோ?

இனிமை- தமிழ் காதல் கவிதைகள் - Tamil kaadhal kavithaigal

இனிமை
------------

தோற்பதும்

இனிதாவது மனம் ஒத்த

காதலில் மட்டுமே!!!

முயற்சி - தமிழ் கவிதைகள் - Tamil kavithaigal

முயற்சி
------------

சிறகொடிந்த பறவையாய்

இருப்பதாய் நினைப்பதைவிட

மேலே மேலே

பறந்து பறந்து

சிறகொடிதல் அனைத்திலும்

மேலானது!!!

அனுமதி- தமிழ் காதல் கவிதைகள் - Tamil Kaadhal Kavithaigal


அனுமதி
------------

உன்னில் நான்

வேறூன்றியுள்ளதாய்

சொன்னாயே நீயன்று !!!

பின் ஏன் என்னை

உன் அநுதின வாழ்வில்

என்னொருயடிகூட

உள் நுழைய அனுமதி

மறுக்கிறாயே நீயோயின்று!!!

ஆக்கிரமிப்பு - தமிழ் காதல் கவிதைகள் - Tamil Kaadhal Kavithaigal

ஆக்கிரமிப்பு
------------------

எண்ணை வளத்திற்க்காய்

நாடுகள் - சரி !!!

என்ன வளத்திற்க்காய்

என்னை நீ?

Sunday, September 23, 2012

தமிழுக்கும் அமுதென்று பேர்!!!


படித்ததில் பிடித்தது - தமிழ் காதல் கவிதைகள்


மனசுக்குப் புத்தியில்லை
ஓடி ஓடிப்போகிறது
அவள் பின்னால்
மூளை கூப்பிடக் கூப்பிட
இழுத்து வந்து
செருப்பால் அடித்து
கட்டிப் போடுவதே இங்கு
தொழிலாய்ப் போச்சு.

Thursday, September 13, 2012

கவிஞன் - தமிழ் காதல் கவிதைகள் - Tamil Kaadhal Kavithaigal

கவிஞன்
------------

உன் மேல் காதலில் விழுந்த

என்னை கவிஞனாக்கியதாய்

இயம்புகிறாய்! - அது

உண்மையோ இல்லையோ

அறியவில்லை!

பைத்தியக் காரனாக்கிவிட்டு

அதுவே எனது இயல்புமாக்கி

விட்டாய் !!

காதல் செய்வீர் - தமிழ் காதல் கவிதைகள் - Tamil Kaadhal Kavithaigal

 காதல் செய்வீர்
----------------------
ஒருவரை மட்டுமே

உருகி உருகி

நினைந்து நினைந்து

மருகி மருகி

வாழும் நிலை

காதலில் மட்டுமே.

படித்ததில் பிடித்தது - தமிழ் காதல் கவிதைகள்


நீ வரும் வரை

உன்னைத் தேடுகிறேன்

நீ வந்த பிறகு

என்னைத் தேடுகிறேன்.

Wednesday, September 12, 2012

உலகு - தமிழ் காதல் கவிதைகள் - Tamil Kaadhal Kavithaigal

உலகு
----------


எனது நதி தேடுவது

உன்னையே அடைந்திடும்

வழி தனையே!!

உன்னிலே முற்றிலும்

தன்னை கலந்திடத் தானே!!!

உடலும் உள்ளமும்

ஒரு சேர மேலெழும்புதல்

நறுமணப் புகை போல்

உன் மேல் படந்திடவே!!!

என்னைச் சுற்றிலும்

பல உலகங்கள் - ஆனால்

நீயே எனது உலகானாய்!!!

உலகே எனக்கு நீயானாய்!!!

Tuesday, September 11, 2012

சிற்பியின் - நுண்ணரசியல்

மனதிற்க்கு பிடித்த காணொளிகளில் மிகவும் பிடித்தது :