Showing posts with label காதல் கவிதைகள். Show all posts
Showing posts with label காதல் கவிதைகள். Show all posts

Thursday, July 2, 2020

கடந்து போ !!!

எப்படித்தான்
அனைத்தையுமே
அனாசியமாக
கடந்து போகிறாய் - நீ
மாறாய்
உன்னை மட்டும்
கடப்பது தான்
அனைத்திற்கும்
கடினம் போலும் !!!!

மயக்கம்

என் இனியவளின்
புன்னகைக்கு
மயங்காத 
நீள் பட்டியலில்
என் வாழ்வு மட்டும்
தப்பிப் பிழைத்திடவா
செய்யும்!!!!

Thursday, December 17, 2015

எங்கே சென்றாய் நீ !!

என்னை அன்பு செய்கிறேன் 
இன்னும் அதிகமாய் நான் !!
நான்...
நான் மட்டுமல்ல
உணர்தலுக்கு பின்னர்..

எனது கோபங்கள், 
தாபங்கள்,
குறைகள், 
ஆதங்கம், 
எதிர்மறை எண்ணங்களை
எங்கே எடுத்துச் சென்றாய் நீ !!!
இங்கே என்னை மட்டும் 
விட்டு விட்டு....!!!
 

Friday, July 11, 2014

கடத்தல் - தமிழ் காதல் கவிதைகள்

கடத்தல்
===========
அனைத்தையும் எளிதில்
கடந்து போகும் என்னால்
உன்னை என்றும் 
கடக்க இயலாது
எப்படி நானே 
என்னைக் கடப்பது?

Tuesday, February 5, 2013

மனம் புதையா நினைவுகள் - தமிழ் காதல் கவிதைகள்

மனம் புதையா நினைவுகள்
---------------------------------------

பேசிய

பேச்சுக்களும்

உணர்ச்சியோடும்

உணர்வோடும்

உறவாடி

உரையாடிய

உரையாடல்களும்

கலந்திருக்கலாம் - இல்லை

கரைந்திருக்கலாம்

காற்றினிலே!!!



உடலொடு

உடல் மேவ

உரசியதும்

முகத்தோடு

முகம் தேய்த்து

முகர்ந்ததும்

தொட்டதும்

அணைத்ததும்

அனைத்தும்

உணர்வற்று

அணைந்திருக்கலாம்

உடலினிலே!!!


நெஞ்சோடு

நெஞ்சம்

கிளர்க்க

நினைவுகளில்

திளைத்தோம்

திகட்டா

இன்பமதில்

நெஞ்சினில்

நிதம் மோதும்

நினைவுகளை

புதைப்பதெங்கே - நீ

நிரம்பிய என்

மனதினிலா?

Monday, October 8, 2012

படித்ததில் பிடித்தது - தமிழ் கவிதை


இரும்பிலும்

பூக்கள் பூக்கும்

ஜன்னலில்

உன் முகம்.

      ( நன்றி : அந்நியன்)

Tuesday, September 25, 2012

அனுமதி- தமிழ் காதல் கவிதைகள் - Tamil Kaadhal Kavithaigal


அனுமதி
------------

உன்னில் நான்

வேறூன்றியுள்ளதாய்

சொன்னாயே நீயன்று !!!

பின் ஏன் என்னை

உன் அநுதின வாழ்வில்

என்னொருயடிகூட

உள் நுழைய அனுமதி

மறுக்கிறாயே நீயோயின்று!!!

Sunday, September 23, 2012

படித்ததில் பிடித்தது - தமிழ் காதல் கவிதைகள்


மனசுக்குப் புத்தியில்லை
ஓடி ஓடிப்போகிறது
அவள் பின்னால்
மூளை கூப்பிடக் கூப்பிட
இழுத்து வந்து
செருப்பால் அடித்து
கட்டிப் போடுவதே இங்கு
தொழிலாய்ப் போச்சு.

Thursday, September 13, 2012

கவிஞன் - தமிழ் காதல் கவிதைகள் - Tamil Kaadhal Kavithaigal

கவிஞன்
------------

உன் மேல் காதலில் விழுந்த

என்னை கவிஞனாக்கியதாய்

இயம்புகிறாய்! - அது

உண்மையோ இல்லையோ

அறியவில்லை!

பைத்தியக் காரனாக்கிவிட்டு

அதுவே எனது இயல்புமாக்கி

விட்டாய் !!

காதல் செய்வீர் - தமிழ் காதல் கவிதைகள் - Tamil Kaadhal Kavithaigal

 காதல் செய்வீர்
----------------------
ஒருவரை மட்டுமே

உருகி உருகி

நினைந்து நினைந்து

மருகி மருகி

வாழும் நிலை

காதலில் மட்டுமே.

படித்ததில் பிடித்தது - தமிழ் காதல் கவிதைகள்


நீ வரும் வரை

உன்னைத் தேடுகிறேன்

நீ வந்த பிறகு

என்னைத் தேடுகிறேன்.

Wednesday, September 12, 2012

உலகு - தமிழ் காதல் கவிதைகள் - Tamil Kaadhal Kavithaigal

உலகு
----------


எனது நதி தேடுவது

உன்னையே அடைந்திடும்

வழி தனையே!!

உன்னிலே முற்றிலும்

தன்னை கலந்திடத் தானே!!!

உடலும் உள்ளமும்

ஒரு சேர மேலெழும்புதல்

நறுமணப் புகை போல்

உன் மேல் படந்திடவே!!!

என்னைச் சுற்றிலும்

பல உலகங்கள் - ஆனால்

நீயே எனது உலகானாய்!!!

உலகே எனக்கு நீயானாய்!!!

Friday, August 31, 2012

உனக்கும் எனக்கும்- தமிழ் காதல் கவிதைகள் - Tamil Kaathal Kavithaigal


உனக்கும்  எனக்கும்
---------------------------

அழகே, நீ என்னை தடுத்திடும் போதும் ..
உன்னை நான் "மிஸ்" பண்ணாமல் இருக்க கற்றுகொடு !

தற்போதைக்கு ,
நம் சந்திப்பும் ,முத்த பரிமாறுதல்களும்
நிகழ்த்திட முடியாததாகவே
இருந்துவிடட்டும்  !
இல்லையென்றால்
அந்த காட்சியின் நினைவுகள் கூட
என்னை கொன்று விடக்கூடும்

எல்லா விதத்திலும் முயற்சிக்கிறேன்
உன்னிடம் உணர்த்திடவும் ,
உணர்த்தாமல் அப்படியே விட்டுவிடவும் !
உனக்கும்  எனக்கும் இடையில்
எந்த ஒரு உறவும் இல்லையென  நான் சொன்ன
சொற்களில் நிழலாக நகர்வது
உன் மீதான அதிக அன்பாகவே இருக்கிறது ...
முதல் நாள் அயலாய் வந்தாய்
மறுநாள் என் இரவுகளை தின்றாய்
பழகிட பழகிட அழகாய் வருகிறாய்
சில நிகழ்வுகளுக்கான காரணங்களை தருகிறாய்
எந்த காரணமும் இல்லாமல்
உன்னுடன்  ஒட்டிகொண்டிருகிறேன் !
                                                                                                                                நன்றி : மீனா

Wednesday, August 29, 2012

மதி !


யார் சொன்னது
நிலா ஒளிரும் தேயுமென
தினம் தினம்
என் கண்முன்
முழுமதியாய் ஒளிருமிவள் யாரோ!!!

இம்மண்ணில்
பிரியமாய் இறங்கிய
இம்மதியின் மதிகண்டோ
வானின் நிலா வெட்கி
மறைகிறதோ!!!

Wednesday, August 22, 2012

சுமை- தமிழ் காதல் கவிதைகள் - Tamil Kaadhal Kavithaigal

சுமை
--------

கையில் உன்னை ஏந்தியபோது

திடுக்கிட்டு பயந்து சொன்னாய்

நான் மிகக் கனமென்று

தினம் தினம் சுமக்கிறேனே

உன்னை என் நெஞ்சில்

இதற்காய் என்ன சொல்வாய்?

Friday, August 17, 2012

யுகங்கள் - தமிழ் காதல் கவிதைகள் -- Tamil Kaadhal Kavithaigal

யுகங்கள்
-------------

வானில் வட்ட நிலா

மறுமுறை தோன்ற

ஓர் பகலே!!!

சுட்டெரிக்கும் சூரியனுக்கோ

ஓரிரவே!!

உனைபிரிந்து மறுநாள்

வருவதற்க்குள்

கடினமாய் கடந்திடுதே

பல யுகங்கள் !!!