Showing posts with label கவிஞர். Show all posts
Showing posts with label கவிஞர். Show all posts

Sunday, February 21, 2021

அறிவோம் தமிழ் - புதிய சொற்கள்

 இன்று கவிஞர் வாலி “கலைஞரை” பற்றி புனைந்த கவிதைகள் புத்தகம் (136 பக்) படிக்க நேர்ந்தது. அவற்றில் கவிஞர் கையாண்ட சில வார்த்தைகளும் அதன் பொருளும். இவை எமக்குப் புதிது!!! உமக்கு??


            புதிய சொற்கள்                                 பொருள்

  1. மதலை                                                        மகன் (குழந்தை)
  2. குதலை                                                       குழந்தை மொழி (மழலை)
  3. மன்பதை                                                   மனிதகுலம்
  4. ஒக்கல்                                                         இடுப்பு
  5. கஞ்சுகம்                                                    அங்கி/சட்டை
  6. குப்பாயம்                                                 சட்டை / கவசம் போன்ற உடை
  7. சீயம்                                                            வெல்லத்தால் செய்யப்படும் இனிப்பு
  8. தகவு                                                            பெருமை
  9. பரல்                                                             விதை
  10. இமிழ்                                                           தழை
                        

Thursday, January 3, 2013

படித்ததில் பிடித்தது - தமிழ் கவிதைகள்

சூடு சொரணை கொஞ்சமும் இல்லை
சொல்லடா நீயா தமிழனின் பிள்ளை?

தோட்டத்தில் தன்னை அழித்தவன் வீட்டுக்கே
தோரணம் ஆனது வாழை! - நீயும்
நாட்டினில் உன்னை அழித்தவன் காலையே
நக்கினாய் நீ ஒரு கோழை!

கூப்பிட்டுப் பதவி கொடுத்த பகைவனை
கும்பிட்டு வாய்பொத்தி நின்றாய்! - அவன்
சாப்பிட்டு மிஞ்சி எறிந்ததை அன்றோ நீ
சாக்கடை நாய்போலத் தின்றாய்!

தீயவர் தலையை திருக மறந்தாய் உன்
தேசத்தைப் பாரடா! நெருப்பு! - அட
ஆயிரம் பெருமை படைத்த உன் அன்னை மண்
அழியநீ அல்லவா பொறுப்பு?

என்றென்றும் உன்தாய் நிலத்தில் தமிழ்வானில்
இன்னொருவன் கொடி பறக்கும்! - அட
நன்றடா நன்று! இருந்துபார் உன் மண்ணில்
நாளை அவன் பிள்ளை பிறக்கும்!

                                                               நன்றி : கவிஞர் காசி.ஆனந்தன்