என்னவளே!!
உன் சிறு புன்னகையின் - மூலம்
என் வாழ்க்கையின்
அனைத்து
சீதோசன நிலைகளையும்
மாற்றியே விடுகிறாய் !!!
Showing posts with label காதல் கவிதைகள்;tamil kavithaigal. Show all posts
Showing posts with label காதல் கவிதைகள்;tamil kavithaigal. Show all posts
Thursday, July 2, 2020
Monday, April 27, 2020
பேச்சு !!!
என்னதான் மௌனமாக
இருக்க முற்பட்டாலும்
மனம் மட்டும்
இடைவிடாது
பேசிக்கொண்டே தான்
இருக்கிறது
உன்னிடம் !!!
Thursday, January 31, 2013
மனது - தமிழ் காதல் கவிதைகள்
மனது
----------
வோடோபோன் நாய் போல்
உன் பின்னே செல்லும் மனதை
அடித்து அடக்கி
இழுத்து வந்து கட்டினாலும்
அடங்க மறுத்து
அத்துமீறுதே!!
என் செய்வேன்?
என் மனதை!!
உலகின் வரைமுறையும்
உள்ளத்தின் வரையறையும்
வகைதொகையின்றி அறிந்திருந்தும்
உடைத்தெறிந்து
உதறித் தள்ளி
ஓயாது ஓலமிடுதே!!
என் செய்வேன்?
என் மனதை!!
----------
வோடோபோன் நாய் போல்
உன் பின்னே செல்லும் மனதை
அடித்து அடக்கி
இழுத்து வந்து கட்டினாலும்
அடங்க மறுத்து
அத்துமீறுதே!!
என் செய்வேன்?
என் மனதை!!
உலகின் வரைமுறையும்
உள்ளத்தின் வரையறையும்
வகைதொகையின்றி அறிந்திருந்தும்
உடைத்தெறிந்து
உதறித் தள்ளி
ஓயாது ஓலமிடுதே!!
என் செய்வேன்?
என் மனதை!!
Thursday, January 24, 2013
கலவை - தமிழ் காதல் கவிதைகள்
கலவை
--------------
பூவில் வாசமும்
நாவில் சுவையும்
வானில் வண்ணமும்
ஊனில் உயிரும்
நீரில் நிறமும்
கண்ணில் காட்சியும்
என்னில் நீயும் !!!
கலந்ததெங்கே?
Labels:
கலவை,
காதல் கவிதைகள்;tamil kavithaigal,
தமிழ்,
தமிழ் கவிதைகள்
Tuesday, January 15, 2013
காதல் - தமிழ் காதல் கவிதைகள் - Tamil kaadhal kavithaigal
காதல்
=======
கனிவுடனே
காதல் காமம்
கற்பித்தாய் !
களித்தோம் - பின்
கழித்தாய் !
காதலில் நித்தம்
நினைத்தாலே போதுமென
நில் சற்றே
விலகியென்றாய் - நான்
விளங்கிடவே
நிதர்சன வாழ்க்கை
நிதம் சொன்னாய் !
சித்தம் கலங்கா
தத்தம் கடமை
நித்தம் புரிவோமென்றாய் !
காலை மாலை
காணும் உன்
கவின்முகம் காணா
கதறும் மனதை
கல்லாக்கிக் கொள்ளலும்
காதலோ?.
=======
கனிவுடனே
காதல் காமம்
கற்பித்தாய் !
களித்தோம் - பின்
கழித்தாய் !
காதலில் நித்தம்
நினைத்தாலே போதுமென
நில் சற்றே
விலகியென்றாய் - நான்
விளங்கிடவே
நிதர்சன வாழ்க்கை
நிதம் சொன்னாய் !
சித்தம் கலங்கா
தத்தம் கடமை
நித்தம் புரிவோமென்றாய் !
காலை மாலை
காணும் உன்
கவின்முகம் காணா
கதறும் மனதை
கல்லாக்கிக் கொள்ளலும்
காதலோ?.
Thursday, January 10, 2013
பிரியா - தமிழ் காதல் கவிதைகள் - Tamil kaadhal kavithaigal
பிரியா
------------------
காற்றில் சுகந்தம்
நீரில் உப்பு
நாவில் இனிப்பு
வானில் நீலம்
ஊனில் உயிர்
நினைவில் நீ !!!
------------------
காற்றில் சுகந்தம்
நீரில் உப்பு
நாவில் இனிப்பு
வானில் நீலம்
ஊனில் உயிர்
நினைவில் நீ !!!
Tuesday, January 8, 2013
காதல் - தமிழ் காதல் கவிதைகள் - Tamil kaadhal kavithaigal
காதல்
======
மனதிற்க்கும்
மூளைக்குமான
தொடர் போராட்டத்தில்
எவ்வகையிலும்
வெல்வது இறுதியில்
என்றும் மனமே!!
======
மனதிற்க்கும்
மூளைக்குமான
தொடர் போராட்டத்தில்
எவ்வகையிலும்
வெல்வது இறுதியில்
என்றும் மனமே!!
Wednesday, January 2, 2013
படித்ததில் பிடித்தது - தமிழ் காதல் கவிதைகள்
காதல் என்ற வார்த்தையில்
காமத்தை ஒளித்து
காவிய காதல் என்று
கற்புரம் அடித்து
இன்றோ நாளையோ
நாளை மறுதினமோ
மணப்போம் என்று சொல்லி
பேசிய போதெல்லாம்
உன் விழி பாவைகள்
கடந்து சென்ற பாதையை
பார்த்தேனும்
பாவிச் சிறுக்கி இவளுக்கு
பாடம் புரிந்திருக்க வேணும்
புதிராய் நின்றுவிட்ட
வாழ்க்கை அரிச்சுவடிகளை
தேடிப்பார்த்தாலும் கிடைக்கவில்லை
காதலின் அர்த்தம் மட்டும்
உன் அகராதியிலாவது கண்டு சொல்
காதலின் அர்த்தம் காமம் மட்டுமேவா
என்று...
( நன்றி : விண்முகில்)
காமத்தை ஒளித்து
காவிய காதல் என்று
கற்புரம் அடித்து
இன்றோ நாளையோ
நாளை மறுதினமோ
மணப்போம் என்று சொல்லி
பேசிய போதெல்லாம்
உன் விழி பாவைகள்
கடந்து சென்ற பாதையை
பார்த்தேனும்
பாவிச் சிறுக்கி இவளுக்கு
பாடம் புரிந்திருக்க வேணும்
புதிராய் நின்றுவிட்ட
வாழ்க்கை அரிச்சுவடிகளை
தேடிப்பார்த்தாலும் கிடைக்கவில்லை
காதலின் அர்த்தம் மட்டும்
உன் அகராதியிலாவது கண்டு சொல்
காதலின் அர்த்தம் காமம் மட்டுமேவா
என்று...
( நன்றி : விண்முகில்)
பாடம் - தமிழ் காதல் கவிதைகள் - Tamil Kaadhal Kavithaigal
பாடம்
---------
காதல் காமம்
பாடம் புகட்ட
கவிஞனானேன்!!
வாழ்க்கை நிதர்சண
நிலை நிறுத்த
நிர்மூலமாக்கி என்னை
பாடம் ஆக்கினாய்!!
இவ்வஞ்ஞானியை
ஞானியாக்கவா ?
மெய்ஞானியாக்கவா??
---------
காதல் காமம்
பாடம் புகட்ட
கவிஞனானேன்!!
வாழ்க்கை நிதர்சண
நிலை நிறுத்த
நிர்மூலமாக்கி என்னை
பாடம் ஆக்கினாய்!!
இவ்வஞ்ஞானியை
ஞானியாக்கவா ?
மெய்ஞானியாக்கவா??
உன்மத்தம் - தமிழ் காதல் கவிதைகள் - Tamil Kaadhal kavithaigal
உன்மத்தம்
--------------------------
கடலலைகள் ஓயலாம்
காற்றும் திசை மாறலாம்
காட்சிகாண் கண்களும்
கவிதைக் கைகளும்
பாதைசெல் கால்களும்
செயல்தனை மறக்கலாம்!
ஓயா உன் நினைவலையால்
ஓங்கிய உன்மத்த நிலை
என்று மாறுமோ !!!
Tuesday, December 4, 2012
தேரை- தமிழ் காதல் கவிதைகள் - Tamil Kaadhal Kavithaigal
தேரை
----------
கல்லுக்குள்
தேரை!!
நெஞ்சுக்குள்
நீ!!!
----------
கல்லுக்குள்
தேரை!!
நெஞ்சுக்குள்
நீ!!!
Labels:
காதல்,
காதல் கவிதைகள்;tamil kavithaigal,
தமிழ் கவிதைகள்,
தேரை
Sunday, November 4, 2012
தேடல்-தமிழ் காதல் கவிதைகள் - Tamil Kadhal kavithaigal
தேடல்-------------
அன்பே !! நீ என்னுடன்
இல்லா ஒவ்வொரு
தருணமும் நானோ
தேடுகிறேன் உன்னை - என்னில்
நீ என்னுடன்
இருக்கும் ஒவ்வொரு
தருணமும் நானோ
தேடுகிறேன் என்னை - உன்னில்
Labels:
காதல்,
காதல் கவிதைகள்;tamil kavithaigal,
தருணம்,
தேடல்
Thursday, November 1, 2012
உறக்கம் - தமிழ் காதல் கவிதைகள் - Tamil kaadhal kavithaigal
உறக்கம்
------------
உனக்காய் மட்டுமே
எனது உறக்கம்
தொலைக்கிறேன்!
அவ்வுறக்கம் உன்னையும்
சேர்தலில்லை கண்டு
உளம் சோர்கிறேன்
என்னுடன் உறங்க
விருப்பம் சொன்னாய் நீ!
உறங்காத எனது எண்ணம்
சொலேன் நான் !!!
Labels:
உளம்,
உறக்கம்,
காதல்,
காதல் கவிதைகள்;tamil kavithaigal,
விருப்பம்
சமன்- தமிழ் காதல் கவிதைகள் - Tamil kadhal kavithaigal
சமன்
--------
உனது உதட்டோரப் புன்னகைக்கான
எனது காத்திருப்பின்
காரண காரியம்
சமனாகிறது
உனது புன்னகை
மலரும் அத்தருணத்திலேயே !!
--------
உனது உதட்டோரப் புன்னகைக்கான
எனது காத்திருப்பின்
காரண காரியம்
சமனாகிறது
உனது புன்னகை
மலரும் அத்தருணத்திலேயே !!
Monday, October 8, 2012
படித்ததில் பிடித்தது - தமிழ் காதல் கவிதைகள்
கூப்பிடு தொலைவில் நீ
என்ன சொல்லிக்
கூப்பிடுவது என்ற
தயக்கத்தில் நான்.
தெரிந்துகொள்ளும் ஆசை
காதலாகிப் போனது.
( நன்றி : இரா. சரவணன்)
என்ன சொல்லிக்
கூப்பிடுவது என்ற
தயக்கத்தில் நான்.
தெரிந்துகொள்ளும் ஆசை
காதலாகிப் போனது.
( நன்றி : இரா. சரவணன்)
Labels:
ஆசை,
காதல்,
காதல் கவிதைகள்;tamil kavithaigal,
தமிழ் கவிதைகள்,
தயக்கம்,
தொலை
காதல் தீபம்- தமிழ் காதல் கவிதைகள் - Tamil Kaadhal kavithaigal
காதல் தீபம்
----------------
விரும்பித்தான்
விழுகிறதோ
விட்டில் பூச்சியும்
தீபத்தில் !
காதலில் நானும்!!!
----------------
விரும்பித்தான்
விழுகிறதோ
விட்டில் பூச்சியும்
தீபத்தில் !
காதலில் நானும்!!!
Labels:
love,
காதல்,
காதல் கவிதைகள்;tamil kavithaigal,
தமிழ் கவிதைகள்,
தீபம்,
விட்டில்
சுற்று- தமிழ் காதல் கவிதைகள் - Tamil kaadhal kavithaigal
சுற்று
---------
புவிக்கோர் சூரியன்
முழுமதிக்கோர் பூமி
எனக்கோ நீ !!!
---------
புவிக்கோர் சூரியன்
முழுமதிக்கோர் பூமி
எனக்கோ நீ !!!
Labels:
காதல் கவிதைகள்;tamil kavithaigal,
தமிழ் கவிதைகள்,
நான்,
நீ,
புவி,
பூமி,
முழுமதி
துடிப்பு- தமிழ் காதல் கவிதைகள் - Tamil kaadhal kavithaigal
துடிப்பு
========
உன்னருகே
இருக்கும் ஒவ்வொரு
தருணத்திலும் நான்
காந்தப் புலத்தில்
அகப்பட்ட
இருப்புத் துண்டாய்
துடிக்கிறேன்!
உனைச் சேர்தற்க்கே!!!
Saturday, October 6, 2012
வாழ்வு- தமிழ் காதல் கவிதைகள் - Tamil kaadhal kavithaigal
வாழ்வு
-----------
என்
-----------
என்
உயிரிலும்
உணர்விலும்
நினைவிலும்
உறைந்து விட்டாய்
நீ!
நான்
உயிர்
வாழ்ந்ததும்
வாழ்வதும்
வாழ நினைப்பதும்
உன்னாலே !!
Labels:
உணர்வு,
உயிர்,
காதல் கவிதைகள்;tamil kavithaigal,
தமிழ் கவிதைகள்,
நினைவு,
வாழ்வு
பெய்யெனப் பெய்- தமிழ் காதல் கவிதைகள் - Tamil kaadhal kavithaigal
பெய்யெனப் பெய்
-----------------------
-----------------------
சிறு மின்னல் கீற்றாய்
சிறு சிறு மழையாய்
துவங்கி
இடி மின்னலுடன் கூடிய
அடை மழையாய்
இடைவிடாமல்
பெய்யெனப் பெய்கிறாய்
என்னில்
நீ !!
Labels:
இடி,
காதல் கவிதைகள்;tamil kavithaigal,
காற்று,
தமிழ் கவிதைகள்,
மழை,
மின்னல்
Subscribe to:
Posts (Atom)