Showing posts with label காவியக் காதல். kaadhal kavithaigal.. Show all posts
Showing posts with label காவியக் காதல். kaadhal kavithaigal.. Show all posts

Thursday, December 17, 2015

எங்கே சென்றாய் நீ !!

என்னை அன்பு செய்கிறேன் 
இன்னும் அதிகமாய் நான் !!
நான்...
நான் மட்டுமல்ல
உணர்தலுக்கு பின்னர்..

எனது கோபங்கள், 
தாபங்கள்,
குறைகள், 
ஆதங்கம், 
எதிர்மறை எண்ணங்களை
எங்கே எடுத்துச் சென்றாய் நீ !!!
இங்கே என்னை மட்டும் 
விட்டு விட்டு....!!!
 

Friday, July 11, 2014

கடத்தல் - தமிழ் காதல் கவிதைகள்

கடத்தல்
===========
அனைத்தையும் எளிதில்
கடந்து போகும் என்னால்
உன்னை என்றும் 
கடக்க இயலாது
எப்படி நானே 
என்னைக் கடப்பது?

Wednesday, January 2, 2013

படித்ததில் பிடித்தது - தமிழ் காதல் கவிதைகள்

காதல் என்ற வார்த்தையில்
காமத்தை ஒளித்து
காவிய காதல் என்று
கற்புரம் அடித்து
இன்றோ நாளையோ

நாளை மறுதினமோ
மணப்போம் என்று சொல்லி
பேசிய போதெல்லாம்
உன் விழி பாவைகள்
கடந்து சென்ற பாதையை
பார்த்தேனும்
பாவிச் சிறுக்கி இவளுக்கு
பாடம் புரிந்திருக்க வேணும்
புதிராய் நின்றுவிட்ட
வாழ்க்கை அரிச்சுவடிகளை
தேடிப்பார்த்தாலும் கிடைக்கவில்லை
காதலின் அர்த்தம் மட்டும்
உன் அகராதியிலாவது கண்டு சொல்
காதலின் அர்த்தம் காமம் மட்டுமேவா 
என்று...


                                                            ( நன்றி : விண்முகில்)