Wednesday, September 12, 2012

உலகு - தமிழ் காதல் கவிதைகள் - Tamil Kaadhal Kavithaigal

உலகு
----------


எனது நதி தேடுவது

உன்னையே அடைந்திடும்

வழி தனையே!!

உன்னிலே முற்றிலும்

தன்னை கலந்திடத் தானே!!!

உடலும் உள்ளமும்

ஒரு சேர மேலெழும்புதல்

நறுமணப் புகை போல்

உன் மேல் படந்திடவே!!!

என்னைச் சுற்றிலும்

பல உலகங்கள் - ஆனால்

நீயே எனது உலகானாய்!!!

உலகே எனக்கு நீயானாய்!!!

No comments: