Tuesday, January 15, 2013

காதல் - தமிழ் காதல் கவிதைகள் - Tamil kaadhal kavithaigal

காதல்
=======

கனிவுடனே

காதல் காமம்

கற்பித்தாய் !

களித்தோம் - பின்

கழித்தாய் !

காதலில் நித்தம்

நினைத்தாலே போதுமென

நில் சற்றே

விலகியென்றாய் - நான்

விளங்கிடவே

நிதர்சன வாழ்க்கை

நிதம் சொன்னாய் !

சித்தம் கலங்கா

தத்தம் கடமை

நித்தம் புரிவோமென்றாய் !

காலை மாலை

காணும் உன்

கவின்முகம் காணா

கதறும் மனதை

கல்லாக்கிக் கொள்ளலும்

காதலோ?.

No comments: