Wednesday, August 5, 2009

மீண்டும் ஆரம்பம்....

மே மாதம் பதினாறு, பதினேழு மற்றும் பதினெட்டு திகதிகளில் நடந்த கொடுமைகளை அடுத்து மனது எதிலும் நாட்டம் கொள்ளாமல் அலை பாய்ந்தது, உலகமே பார்க்க நடந்தேறிய கொடுமைகளைக் கண்டு , உலகத்தின் மீதே கோபமும், வெறுப்பும் கூடியது...

உலகத்தின் நியதிகள் எப்படி நிர்னயிக்கப் படுகின்றன எனபதற்க்கு சாட்சியங்கள் கூற இனி எவரும் தேவையில்லை !!!

நியாயம் பற்றிப் பேசும் தகுதியை அது இழந்து நாட்கள் பல ஆகிறது...

மனச்சாட்சி மண்ணாங்கட்டியாகிய கதை இதுதான் போலும்...

அன்றைய கொடுமையான நாட்கள் இப்பொழுது வரலாறு ஆகி போனது...

முன்னைய வரலாறுகள் மண்ணாகிப் போனது...

உலகத்தால் சாகடிக்கப்பட்ட ஆத்மாகள்...அப்படியே இருந்து பட்டு போகட்டும்...

இனி நம்மால் என்னதான் செய்ய முடியும்?

அனைத்தையும் மீறி ,இனி நாம் என்னதான் செய்யப் போகிறோம்!!!

No comments: