Thursday, August 20, 2009

Tamil kavithaigal

அது காதலாகுமா?
================

நான் உன்னை விட்டு விலகும் போதெல்லாம்
முன்னிலும் நெருங்கியதாகவே உணர்கிறேன்


உனக்குக் கொடுத்த வாக்கை காப்பாற்றுவேன்
என்று முன்னிலும் உறுதியாகவே
இறுதியாகவே கூறினாலும்
ஒவ்வொரு முறையும் தோற்றுப் போகும் நான்
வெட்கமென்பதே அறியாதவனாயிருக்கிறேன்


என்னையும் அறியாமல் நான்
இவ்வாறு இருப்பதற்க்கு காரணம்
என்னை ஆட்டிப் படைக்கும் சக்தியே
அது தான் காதல் என்றால்
அது இல்லாமல் போக
நான் தான் இல்லாமல் போக வேண்டுமா?


அன்புக்குரியவளை
ஆட்டிப் படைத்து
உடலையும் உள்ளத்தையும்
உருக்குலைக்கும் அது தான்
என் காதல் என்றால்
அது காதலாகுமா?

No comments: