Thursday, November 1, 2012

படித்ததால் தெரிந்து கொண்டது ---- அன்பை அடையாளங்காணல்

அன்பை அடையாளங்காணுதல் எப்படி? இப்படி !!! :)



”குடத்துள் விளக்கும் தடற்றுள் வாளும் போல

இதுகாண் அன்பு என்ரு போதத் திறந்து காட்டாலாகாது.

அன்புடையரான குணக்கண்டவிடத்து இவை உண்மையான

ஈங்கு அன்பு உண்டென்ரு அனுமித்துக் கொள்ளற்பாற்று!!

அன்புடையரான குணம் யாவையோ எனின்...


  • சாவிற் சாதல்
  • நோவின் நோதல்
  • ஒண்பொருள் கொடுத்தல்
  • நன்கினிது மொழிதல்
  • புணர்வு நனிவேட்டல்
  • பிரிவு நனியிரங்கல்
என இவை”   (இது அக்கால உரை நடை, இதுகாற் கொண்டு, இக்கால பொருள் படும் படி கீழ்காண்க)


பொருள் : 

 குடத்துள் விளக்கு, உரைக்குள் கத்தி போல.... இதுதான் அன்பு என்று அறியுமாரு திறந்து காட்ட முடியாது. அன்புள்ளவரின் 

குணங்களைப் பார்க்கும் போது இவை இருப்பதால் (உண்மையாய்) இங்கே அன்பு இருக்கிறது என்று அறிந்துகொள்ள முடியும். அன்புள்ளவரின் குணங்கள் என்னென்ன என்றால்..

  • சாவிற் சாதல்
  • நோவு வந்தால் வருத்தப் படுதல்
  • பொருள் உதவி செய்தல்
  •  நல்லதாய் இனிமையாய் பேசுதல்
  • சந்தித்தலை விரும்பல்
  • பிரிவில் வருந்தல்    
என்பனவாம்.”


(சுஜாதாவின் கற்றதும் பெற்றதும் - பாகம் IV பக் : 103)



2 comments:

Jacky said...

Nice if you do பொருள் உதவி செய்தல் to me...I can see your love

Jacky said...

Nice if you do பொருள் உதவி செய்தல் to me...I can see your love