Thursday, October 27, 2011

Tamil kavithaigal

விடிவு
=======
நீண்ட நெடிய

வெறிச்சோடிய சாலையில்

இணையற்ற தனியொரு ஆளாய்!!

முடிவே இராதாவென

எண்ணி ஏங்கிட வைக்கும்

சிறு வெளிச்சக்கீற்றுமற்ற

கரிய இரவுகளின் தனிமையில் !!

முகமொன்றுமறியாத

நகரத்தின் திருவிழாக்

கூட்டமதில் தனியொருவனாய்

தவித்து இருக்கையில் !!!

நடுநிசி ஓநாயாய்

ஊளையிடும் மனம் !!

தனிமையின் சஞ்சாரத்தில்

மனம் லயிக்காமல்

உன் நினைவுகளில்

மூழ்கியதால் மூர்ச்சையாகிறது !!!


உடலும் மனமும்

வியாபித்திருக்கும் உன்

நினைவலைகள்

மோதி மோதி

உணர்வற்ற நிலையில்

உயிரற்ற சடலமாய்

இருக்குமெனக்கு உயிர்மழை

உனது தொடுதல் விமோசனமே !!

No comments: