Showing posts with label பத்து குற்றங்கள். Show all posts
Showing posts with label பத்து குற்றங்கள். Show all posts

Sunday, February 21, 2021

நன்முறையில் சொல்வது/எழுதுவது எவ்வாறு - நன்னூல் கூறும் அறிவுரைகள்

கீழ்காணும் குற்றங்கள் களைந்து எழுதுதலே ‘எவற்றையும் நன்முறையில் எழுதும்/சொல்லும் முறை’ என நன்னூல் கூறுகிறது.

குன்றக் கூறல் மிகைபடக் கூறல்

கூறியது கூறல் மாறுகொளக் கூறல்

                    வழூஉச்சொற் புணர்த்தல் மயங்க வைத்தல்

                    வெற்றெனத் தொடுத்தல் மற்றொன்று விரித்தல்

                    சென்றுதேய்ந் திறுதல் நின்றுபயன் இன்மை

                    என்றிவை ஈரைங் குற்றம் நூற்கே. நன்னூல் 12 

இதன் பொருள் விரிக்க,

  1. குறைவுபடக் கூறுதல்
  2. மிகைப்படக் கூறுதல்
  3. கூறியவற்றையே கூறுதல் (திரும்பத் திரும்ப கூறுதல்)
  4. கூறியவற்றை முரணாகக் கூறுதல்
  5. சொல்லியவற்றில் குற்றமிருக்கக் கூறுதல் (சொற்குற்றம், பொருட்குற்றம்)
  6. மயக்கத்தோடு கூறுதல் (உ.தா. பொருள் தெளிவற்ற மயக்கம்)
  7. வெற்றுச் சொற்களாய் தொடுத்து அலங்காரமாய் கூறுதல்
  8. ஒரு பொருள்படத் துவங்கி மற்றொரு பொருள்படக் கூறுதல்
  9. ஆரம்பம் விரிவாயும் பின் தேய்மானமாயும் முடித்தல்
  10. எப்பொருள் பயனும் இன்றி கூறுதல்