Showing posts with label நவகாளி. Show all posts
Showing posts with label நவகாளி. Show all posts

Thursday, February 25, 2021

காந்தியின் பிரம்மசரியமும், காட்டில் ஜிலேபியும்...

  சுதந்திரத்திரத்திற்கு பிறகு 1948 காலக் கட்டத்தில் நவகாளி கலவரத்திற்குப் பின் அங்கு யாத்திரையில் ஈடுபட்டிருந்த காந்தியின் பிரயாணத்தில் இரு தினங்கள் கல்கி “சாவி” கலந்து கொண்டு, அது குறித்து எழுதிய கட்டுரைத் தொகுப்பிலிருந்து.....

என்னுடைய அந்தரங்க வாழ்க்கையில் சந்தேகம் கொண்ட ஒருவர் என்னுடைய பிரம்மசரிய வாழ்க்கையில் அவநம்பிக்கை தெரிவித்திருக்கிறார். நான் எப்போதும் ஸ்திரீகளுடன்  நெருங்கிப் பழகுகிறேன் என்றும், அதனால் சந்தேகமாயிருக்கிறதென்றும் குற்றம் சாட்டியிருக்கிறார். இவரைப் போலவே இன்னும் சிலரும் என் மீது சந்தேகம் கொண்டிருக்கிறார்கள் என்பதும் எனக்குத் தெரியும். எனக்கு அந்தரங்கம் என்பது எதுவும் கிடையாததாகையால், இந்தச் சந்தேகத்தைப் போக்க வேண்டியது எனது கடமை”

“ கடந்த இருபது வருடங்களுக்கு மேலாக நான் பிரம்மச்சரியத்தைக் கடைபிடித்து வருகிறேன். ஐம்புலன்களையும் அடக்கி ஆண்டு வருகிறேன்.  நாவுக்கு ருசியான பண்டங்களைச் சாப்பிடுவது கிடையாது. உயிர் வாழ்வதற்கு எவ்வளவு ஆகாரம் அவசியமோ, அதைவிடக் குறைவாகவே சாப்பிட்டு வருகிறேன். என்னுடன் எந்த நேரமும் பெண்கள் இருந்து வருவது உண்மையே. பெண்களின் அருகிலேயே இருந்தும் பிரம்மசரியத்தைக் காப்பது தான் உண்மை யோகியின் லட்சணம்.

”காட்டிலேயே உள்ள ஒருவன் ’ நான் ஜிலேபி சாப்பிடுவது கிடையாது’ என்றால் அதில் ஆச்சரியம் கிடையாது. ஏனெனில், காட்டிலே ஜிலேபி கிடைக்காது. ஆகையால், கிடைக்காத ஒரு பொருளைச் சாப்பிடுவதில்லை என்று சொல்லுவது ஆச்சரியமாகாது. அதைப் போலவே, பெண்களின் மத்தியில் இருந்து கொண்டு பிரம்மசரிய வாழ்க்கையில் வெற்றி பெறுவது தான் உண்மையான வெற்றியாகும். இந்தப் பரீட்சையில் நான் பரிபூரண வெற்றி அடைந்திருக்கிறேன் என்று சத்தியமாகக் கூறுகிறேன்.”

[மூலம் : நவகாளி யாத்திரை - ஆசிரியர் சாவி]