Friday, February 26, 2021

தமிழகத்தில் காந்தியும், இந்தியும்....

 சுமார் எழுபது (70) வருடங்களுக்கு முன்பிருந்தே தமிழகத்தில் “இந்தி பிரச்சார சபா”  செயல்பட்டு வருவதாயும்,  தியாகராய் நகரில் சபா ஏற்பாடு செய்திருந்த பிரமாண்ட கூட்டத்தில் காந்தி கலந்து கொண்டதாயும் தம் புத்தகம் ஒன்றில் குறிப்பிடுகிறார் கல்கி “சாவி” அவர்கள்.

குறிப்பாய், தியாகராய நகரின் தென் கிழக்குப் பிரதேசத்துக்கு “ஹிந்துஸ்தானி நகரம்” என்று நாமம் சூட்டியிருக்கிறார்கள் என்று புளகாங்கிதம் அடைகிறார். அப்படியொரு பகுதி இன்றும் அத்தகு பெயரில் அங்கு உண்டா?

காந்தி பேசியதாய் கல்கி “சாவி” குறிப்பிடுவது,

”மனிதனுக்குப் பிராணவாயு எவ்வளவு அத்தியாவசியமோ, அதைப் போல இந்திய மக்களுக்கு ஹிந்துஸ்தானி பாஷையும் அவசியமாகும். ஹிந்துஸ்தானி கற்பதை ஒரு முக்கிய தர்மமாகக் கருத வேண்டும். ஹிந்துஸ்தானி மிகவும் சுலபமான பாஷை. புத்திசாலிகளான தென்னிந்தியர்களுக்கு ஹிந்தி கற்பது ஒரு பிரமாதமான காரியமல்ல”

[மூலம் : நவகாளி யாத்திரை - ஆசிரியர் சாவி]

அண்ணல் சொல்வது யாதெனில், ஹிந்தி பிராணவாயுவாம், மற்ற பிராந்திய மொழிகள் எல்லாம் என்னவாம்?. கவனியுங்கள் “தென்னிந்தியர்கள் புத்திசாலிகளாம்”, நயந்து பேச்சால் ஹிந்தி திணிப்போ?.

இன்று, வடக்கர்கள் தமிழ் இலக்கியங்களை மேற்கோள் காட்டி நமக்கு பூச்சாண்டி காண்பிக்கிறார்கள், அவ்வளவே!!! 


No comments: