Share it

Wednesday, January 25, 2012

தமிழ்கவிதை - Tamil kavithai

வரம்

நினைக்கும் போது வந்து


நினையாததைத் தந்து

நித்திலம் போல

நெஞ்சத்தில் நிலைத்து

நின்று நித்தமெனக்கு

நெக்குருகி யாம்

தந்த தரிசனங்கள்

வகை எவ்வகை!!!

Thursday, October 27, 2011

Tamil kavithaigal

சந்தேகம்
========

சிறைவாசமிருந்து மீண்ட

சீதைக்கே சிதைமூட்டினான்

கண்டதும் காதலில் விழுந்த

அவள்தன் காதல் கணவன் !!!


பொம்பியா சீசரின்

நம்பிக்கைக்குரிய

மனைவிதான் இருப்பினும்

கிடைத்த பரிசு

அவளுக்கு என்னவோ?


புகைபோலிருப்பின்

தீ இருந்தே தீருமா?

இலவம் பஞ்சின் மேல்

கண் வைத்து

காத்திருக்கும் கிளி

இதில் இலவத்தின்

பங்குதான் என்னவோ?

Tamil kavithaigal

விடிவு
=======
நீண்ட நெடிய

வெறிச்சோடிய சாலையில்

இணையற்ற தனியொரு ஆளாய்!!

முடிவே இராதாவென

எண்ணி ஏங்கிட வைக்கும்

சிறு வெளிச்சக்கீற்றுமற்ற

கரிய இரவுகளின் தனிமையில் !!

முகமொன்றுமறியாத

நகரத்தின் திருவிழாக்

கூட்டமதில் தனியொருவனாய்

தவித்து இருக்கையில் !!!

நடுநிசி ஓநாயாய்

ஊளையிடும் மனம் !!

தனிமையின் சஞ்சாரத்தில்

மனம் லயிக்காமல்

உன் நினைவுகளில்

மூழ்கியதால் மூர்ச்சையாகிறது !!!


உடலும் மனமும்

வியாபித்திருக்கும் உன்

நினைவலைகள்

மோதி மோதி

உணர்வற்ற நிலையில்

உயிரற்ற சடலமாய்

இருக்குமெனக்கு உயிர்மழை

உனது தொடுதல் விமோசனமே !!

Sunday, January 16, 2011

Tamil kavithaigal

யாரடா நீ?
==========

ஒரு மழையும் ஒரு புயலும்
ஒன்று சேர ஏற்படுத்துகிறாய் !
எப்படி முடிகிறது உன்னால் மட்டும் ?
நல்லதும் தீயதும் ஒன்றே என்றும்
பொய்யும் உண்மையும் அழகுதான் என்றும்
நீ மட்டுமே சொல்கிறாய் !
மனிதர்களின் பார்வைகள்
கண்ணாடியின் வழியே தோன்றும்
காட்சி பிழைகளான பின்பங்கள் என
நன்றாக உணர்ந்தவன் நீ
அதனாலேயே அதை கல் எரிந்து
உடைதிடவும் உன்னால் மட்டுமே முடிகிறது !
கடவுள் காதல்,காமம்,பெண் எனும் பட்டியலில்
ஒவ்வொன்றுக்குமான உனது
விளக்கங்கள் பிரமிப்பாய் இருக்கிறது .....
பெண் உணர்வுகளின் கடைசி சொட்டு
ரத்தத்தையும் உறிந்துவிடும் ஆண்களுக்கிடையில்
என்னொரு சிறு உணர்வும் கூட
புண்பட்டு விடாது பார்த்துகொள்கிறாய்...
பயணத்தின் வலி நெடுகிலும்
நான் பார்க்கும் ஆண்கள் எல்லோரிடமும்
மனதுக்குள் ஓர் கேள்வியை கேட்கிறேன்
"நீங்கள் யாரும் ஏன் அவனை போல் இருக்கவில்லை " என்று
நான் கேட்கும் கேள்விகளுக்கு நடுவே
இப்போதும் ஒரு புன்னகை செய்வாய்
ஆயிரம் வார்த்தைகளின் அர்த்தங்களை
ஓர் புன்னகையில் உன்னால் மட்டுமே
உணர்த்திட முடியும் ......
எல்லோரும் உன்னால் என்னென்னவோ ஆகிறார்கள்
ஆனால், நீ , நீயாகவும் ,நீயே இந்த உலகமாகும்
உன்னால் மட்டுமே இருக்க முடியும் .....
எப்போதும் ...






நன்றி : மீனா...

Saturday, October 16, 2010

War on Democracy - Film by John Pilger

I am posting this film* as to get a different perspective of the world around us. It is not the world we see is always real...there exists different perspectives of the world.

Democracy - Its mainly a pseudo we mainly see all around us.

Freedom - Like a cow tied to a longer rope. (remember having read somewhere).
It is just all about your Fcuking feeling!!!.

Now to Film,

Part 1


Part 2


Part 3



Part 4


Part 5


Part 6


Part 7


Part 8


Part 9


Part 10



*Disclaimer:
Viewers and readers, this film is a link taken from youtube, if in any case, youtube decides to remove the clips, it may not be available for your view as well. These videos are posted for the sake of and getting the perspective of other side. there is not any other agenda , hidden or otherwise.